தானியங்களை, ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பின், ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். அதன் பிறகு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், அதில் நீரை தெளித்து, ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும். இதனை, முளைகட்டிய தானியம் என்பார்கள். இவற்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
நன்மைகள்
பொதுவாக, முளைக்கட்டிய 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.
தானியங்களில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.
திட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.
இயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, ஜீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
கூட்டு நிலையில் இருக்கும் கல்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற தாது வெளியிடப்படுகின்றன.
முளை கட்டப்பட்ட தானியங்களை, சமைக்காமலும் கூட உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் தானியங்களின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு ஆகியவை இதில் உள்ளன. இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகின்றன. மேலும், உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக விட்டமின் ‘ஏ’, ‘பி-கொம்ப்ளக்ஸ்’, ‘சி’ மற்றும் ‘ஈ’ ஆகியவை அதிரிகரிக்கின்றன.
இவற்றை, வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு
சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
மேலும், முளைகட்ட வைக்க சுத்தமான நீரை மாத்திரம் பயன்படுத்துங்கள். சந்தைகளில் கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள். அதே போல தினமும் ஒரே வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வோரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM