இந்தியாவில் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
சுகயீனமுற்ற மாணவர்கள் அருந்திய மதிய உணவை பரிசோதனை செய்ததில், அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமையல்காரர் மதிய உணவில் இறந்து கிடந்த பாம்பை அகற்றிய பின் மாணவர்களுக்கு உணவை பரிமாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் வசிக்கும் சுமார் 500 மாணவர்கள் அந்த உணவை உட்கொண்டிருக்கலாம் என இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் உள்ளூர்வாசிகள் வீதிளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் உண்மையாக இருந்தால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற பெரும் பிரச்சினையை இது எழுப்பும் என இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM