பன்னீர் டிக்கா செய்வது எப்படி என்று பார்ப்போம்......
தேவையான பொருட்கள் :
தயிர் - 400 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
பன்னீர் டிக்கா செய்ய
பன்னீர் - 600 கிராம்
மஞ்சள் குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாய்
பச்சை குடைமிளகாய்
வெங்காயம் - 2
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு, கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கட்டியின்றி நன்கு கலக்கவும். தயிர் கலவை தயார்.
2. அடுத்து கடலை மாவு, சோள மாவு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
3. பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும்.
4. பின்பு தயிர் கலவையை ஊற்றி நன்கு கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
5. 3 மணி நேரம் கழித்து, பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை குச்சியில் குத்தி வைக்கவும்.
6. கிரில் பானில் சிறிது எண்ணெய் தடவி அதன் மீது பன்னீர் டிக்காவை வைக்கவும். கிரில் பானை 2 நிமிடம் மூடி கிரில் செய்யவும்.
7. பன்னீர் டிக்காவை மற்றொரு பக்கமாக சுழற்றி வைக்கவும். மீண்டும் 2 நிமிடம் மூடி கிரில் செய்யவும்.
8. கிரில் செய்யும் போது அனைத்து பக்கங்களிலும் சிறிது எண்ணெய் தடவவும்.
9. கிரில் செய்த பன்னீர் டிக்காவை ஒரு தட்டுக்கு மாற்றி டிக்கா மீது சிறிது சாட் மசாலா தூள் தூவவும்.
10. சுவையான மற்றும் காரமான பன்னீர் டிக்காவை சிறிது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM