ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து நடத்திய மே தின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் வியாழக்கிழமை (1) நடைபெற்றது.
இந்த மே தினக் கூட்டம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஸ்ணன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் செயலாளர் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க, சுஜித் சஞ்சே பெரேரா, உமா சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' எனும் தொனிப்பொருளில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிற்பகல் 2 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் கூட்டம் ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சுமார் இரு மணித்தியாலங்களில் கூட்டம் நிறைவடைந்தது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM