இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுடைய புத்தி சாதூரியத்தால் குறுகிய காலத்திற்குள் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு சம்பாதிக்கும் வல்லமையை பெற்றிருப்பார்கள். இவர்கள் வெற்றிகளை தொடர்ச்சியாக குவித்து வரும்போது திடீரென்று வாழ்க்கையில் மிகப் பெரிய வீழ்ச்சி அல்லது தோல்வி ஏற்படக்கூடும். அதன் பிறகு வெற்றியின் சூத்திரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு தொடர்ந்து போராடுவார்கள்.
ஆனால் இவர்களால் மீண்டும் பழைய நிலையில் வீரியமாக சம்பாதிக்க இயலாத நிலை உண்டாகும். இத்தகைய தருணத்தில் நீங்கள் தொடர்ந்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றாலும் அல்லது தோல்வியடைந்த செயல்பாடுகளில் வெற்றியைப் பெற வேண்டும் என்றாலும் இத்தகைய வாழ்வியல் பரிகாரத்தை ஆயுள் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ள தொடங்கினால்... உங்களது வெற்றிகள் தொடர்வதுடன் சாதனையாளராக மிளிர தொடங்குவீர்கள்.
மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள அல்லது உங்களது ஊரில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் அங்குள்ள பிணவறைக்குச் சென்று உயிரற்ற சடலத்தை சொந்த ஊருக்கோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை செய்ய இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தொடங்குங்கள். ( ஆம்பியுலன்ஸ் செலவு- பிணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவு, வாகன வசதி- பொருளாதார உதவி- உடலுழைப்பு - இறுதி சடங்கிற்கான உதவி- சவப்பெட்டி... )
அரசாங்க பிணவறையில் கிடத்தப்பட்டிருக்கும் சடலத்தை அவரது மகனோ.. மகளோ.. உறவினர்களோ.. இறுதிச்சடங்கு செய்ய விரும்பி இருப்பார்கள். ஆனால் அதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் இருக்காது அல்லது கிடைத்திருக்காது. இது போன்ற தருணங்களில் நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருந்து இறுதி காரியத்தை அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்தால்... அதன் மூலம் உங்களுடைய வலிமையான கர்மா கூட நீங்கி, இந்த பிறவிலேயே சுப பலன்களை விரைவாகவும், கூடுதலாகவும் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இத்தகைய வாழ்வியல் பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போது உங்களுக்கான மாயத் தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் தொடர்ச்சியாக வருவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM