அட்னெக்சல் கட்டி எனும் பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

30 Apr, 2025 | 04:19 PM
image

எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் சிலருக்கு அட்னெக்சல் கட்டி எனும் கருப்பையை சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் கட்டி ஏற்படுகிறது. இதற்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய இளம் பெண்களின் பலருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக வருவதில்லை. சிலருக்கு ஓராண்டு வரை கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புடன் சோர்வு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வீக்கம், சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம், ரத்தப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளும் ஏற்பட்டிருந்தால்..‌ உங்களுக்கு அட்னெக்சல் கட்டிகள் ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.

பொதுவாக எம்முடைய பெண்களுக்கு கருப்பையை சுற்றியுள்ள உறுப்புகள் மற்றும் இணைப்பு திசுக்களில் உருவாகும் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி.. கட்டியாக உருவெடுக்கிறது. இவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் கட்டி அல்ல என்றாலும் ... இதனை தொடக்க நிலையிலே சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விட வேண்டும். முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை மேற்கொள்ள மறுத்தால்.. இவை புற்றுநோய் கட்டியாக மாறக்கூடிய அபாயம் உண்டு.

பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் கரு முட்டையின் உற்பத்தி கருப்பையில் நிகழும். இத்தகைய கருப்பையுடன் ஃபெலோபியன் குழாய்கள் என்ற அமைப்பும் உண்டு. இதனை பிரத்யேக திசுக்கள் இணைக்கின்றன. இந்த திசுக்களில் கட்டிகள் ஏற்படக்கூடும். இதனை துல்லியமான பரிசோதனை மூலம் அவதானிக்கலாம். இதனை உரிய தருணத்தில் கண்டறியாவிட்டால் கருப்பைக்குள் நிகழ வேண்டிய கருவின் வளர்ச்சி வெளிப்பகுதியில் ஏற்பட்டு பாரிய சிக்கலை உண்டாக்கிவிடும்.

மேலும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனையையும் ஏற்படுத்தும். வெகு சிலருக்கு இத்தகைய கட்டிகள் புற்று நோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு அதிகம். உரிய தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மாதவிடாய் சுழற்சியில் பாரிய பாதிப்பு உண்டாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் வைத்தியரை சந்தித்தால் அவர்கள் இடுப்பு சார்ந்த பகுதிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். குறிப்பாக சிடி ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதனுடன் ரத்த பரிசோதனையும் மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

கட்டியின் வளர்ச்சி... கட்டி உருவாகி இருக்கும் இடம்... ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, கட்டியை அகற்றி, நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு ஓராண்டு வரை வைத்தியர்களின் கண்காணிப்பில் நோயாளிகள் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

வைத்தியர் அருண்குமார்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேதமடைந்த நரம்புகள் மீண்டும் இயல்பான நிலைக்கு...

2025-05-22 16:03:43
news-image

டான்சில் கற்கள் எனும் பாதிப்புக்கான சிகிச்சை

2025-05-21 17:58:30
news-image

பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் “காலிக் பெயின்”...

2025-05-20 18:44:56
news-image

“உணவை நன்கு மென்று உண்ணுங்கள்…!”

2025-05-17 13:31:13
news-image

தேனில் ஊறவைத்த பூண்டு… இத்தனை நன்மைகளைத்...

2025-05-16 16:59:52
news-image

விபத்தில் பாதிக்கப்பட்ட விரல்களுக்கான நவீன சத்திர...

2025-05-14 16:05:53
news-image

சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள்...

2025-05-14 01:21:04
news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02