எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் சிலருக்கு அட்னெக்சல் கட்டி எனும் கருப்பையை சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் கட்டி ஏற்படுகிறது. இதற்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய இளம் பெண்களின் பலருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக வருவதில்லை. சிலருக்கு ஓராண்டு வரை கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புடன் சோர்வு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வீக்கம், சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம், ரத்தப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளும் ஏற்பட்டிருந்தால்.. உங்களுக்கு அட்னெக்சல் கட்டிகள் ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
பொதுவாக எம்முடைய பெண்களுக்கு கருப்பையை சுற்றியுள்ள உறுப்புகள் மற்றும் இணைப்பு திசுக்களில் உருவாகும் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி.. கட்டியாக உருவெடுக்கிறது. இவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் கட்டி அல்ல என்றாலும் ... இதனை தொடக்க நிலையிலே சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விட வேண்டும். முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை மேற்கொள்ள மறுத்தால்.. இவை புற்றுநோய் கட்டியாக மாறக்கூடிய அபாயம் உண்டு.
பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் கரு முட்டையின் உற்பத்தி கருப்பையில் நிகழும். இத்தகைய கருப்பையுடன் ஃபெலோபியன் குழாய்கள் என்ற அமைப்பும் உண்டு. இதனை பிரத்யேக திசுக்கள் இணைக்கின்றன. இந்த திசுக்களில் கட்டிகள் ஏற்படக்கூடும். இதனை துல்லியமான பரிசோதனை மூலம் அவதானிக்கலாம். இதனை உரிய தருணத்தில் கண்டறியாவிட்டால் கருப்பைக்குள் நிகழ வேண்டிய கருவின் வளர்ச்சி வெளிப்பகுதியில் ஏற்பட்டு பாரிய சிக்கலை உண்டாக்கிவிடும்.
மேலும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனையையும் ஏற்படுத்தும். வெகு சிலருக்கு இத்தகைய கட்டிகள் புற்று நோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு அதிகம். உரிய தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மாதவிடாய் சுழற்சியில் பாரிய பாதிப்பு உண்டாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் வைத்தியரை சந்தித்தால் அவர்கள் இடுப்பு சார்ந்த பகுதிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். குறிப்பாக சிடி ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதனுடன் ரத்த பரிசோதனையும் மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
கட்டியின் வளர்ச்சி... கட்டி உருவாகி இருக்கும் இடம்... ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, கட்டியை அகற்றி, நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு ஓராண்டு வரை வைத்தியர்களின் கண்காணிப்பில் நோயாளிகள் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
வைத்தியர் அருண்குமார்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM