(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 15 ஓட்டங்களால் இந்தியா பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
அப் போட்டியில் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கான மைல்கல் சாதனை ஒன்றை ஆரம்ப வீராங்கனை ப்ரதிக்கா ராவல் நிலைநாட்டினார்.
தனது 8ஆவது போட்டியில் விளையாடும் ப்ரத்திகா, மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் விற்பன்னர் சார்லட் எட்வேர்ட்ஸுக்கு 28 வருடங்கள் சொந்தமாக இருந்த சாதனையை முறியடித்தார்.
சார்லட் எட்வேர்ட்ஸ் 9 போட்டிகளில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்திருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டி மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமான ப்ரத்திகா ராவல், ஒரு சதம், 5 அரைச் சதங்கள் உட்பட 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதன் மூலம் இருபாலாரிலும் வேகமாக 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்களில் தென் ஆபிரிக்காவின் ஜென்மான் மாலனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜென்மான் மாலன் 7 இன்னிங்ஸ்களில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
இரண்டாவது வெற்றியுடன் இந்தியா முன்னிலை
இலங்கையும் பங்குபற்றும் இந்த மும்முனை மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 276 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக பிரகாசித்து வரும் ப்ரத்திகா ராவலும் அனுபவசாலி ஸ்மிரித்தி மந்தனாவும் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மந்தனா 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர், ப்ரத்திகா, ஹார்லீன் டியோல் ஜோடியினர் மேலும் 68 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டில் பகிர்ந்தனர்.
ப்ரத்திகா ராவல் 78 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (41 ஆ.இ.), ஜெமிமா ரொட்றிக்ஸ் (41) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு மேலும் பலம் சேர்த்தனர்.
ஓரளவு திறமையை வெளிப்படுத்திய ரிச்சா கோஷ் 24 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்ரிட்ஸ் ஆகிய இருவரும் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
33 ஓவர்கள் நிறைவில் மொத்த எண்ணிக்கை 170 ஓட்டங்களாக இருந்தபோது உபாதை காரணமாக தஸ்மின் ப்ரிட்ஸ் 108 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வு பெற்றார். அது தென் ஆபிரிக்க அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
எவ்வாறாயினும் 6ஆவது விக்கெட் வீழந்த பின்னர் அவர் மீண்டும் களம் நுழைந்தபோதிலும் மேலதிகமாக ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று 109 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரை விட லோரா வுல்வார்ட் 43 ஓட்டங்களையும் ஆன்ரி டேர்க்சன் 30 ஓட்டங்களையும் சுனே லுஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: ஸ்நேஹ் ராணா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM