(எம்.மனோசித்ரா)
இலங்கையில் சிசு மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் அதிகரித்த போக்கினைக் காண்பிக்கிறது. தொடர்ச்சியாக இவ்வாறான அதிகரிப்பிற்கு இடமளிக்க முடியாது. எனவே தான் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை அவசியம் என சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையானது தாய் மற்றும் குழந்தைகள் தொடர்பான சுகாதாரத்தில் உலகலாவிய ரீதியிலும், ஆசியாவிலும் உயர் அளவுகோள்களைக் கொண்ட நாடாகும்.
அவ்வாறிருந்த போதிலும், 2022ஆம் ஆண்டில் 1008 சிசு மரணங்களும், 3300 ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இது முன்னர் இலங்கையில் காணப்பட்டதை விட மோசமான நிலைமையாகும். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
உலகில் இது குறித்து விசேட வழிகாட்டிகள் காணப்படுகின்றன. அதற்கமைய மரணத்துக்கான காரணி கண்டறியப்படாத 5 வயதுக்குட்பட்ட சிறார்களின் மரணங்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும்.
மரணத்துக்கா காரணம் கண்டறியப்படாமல் அந்த மரணம் கைவிடப்பட்டால் சிசு மற்றும் சிறார் மரண வீதம் அதிகரிக்கும். பதிவாகும் ஒவ்வொரு மரணங்களுக்குமான காரணிகள் இனங்காணப்பட்டுள்ளதனாலேயே சிசு மரண வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் 2022இல் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்த பின்னர் சுகாதார அமைச்சு அது குறித்து அவதானம் செலுத்துவதே உசிதமானதாகும்.
இவ்வாறு சிசு மரண வீதம் அதிகரித்துச் செல்வதற்கு தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அதற்கமைய மரணத்துக்கான காரணி கண்டறியப்படாத சிறுவர்களின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு யாரால் எதிர்ப்பினை வெளியிட முடியும்?
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தையொன்று உயிரிழந்த போது அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. எனவே அக்கரைப்பற்று பிரதேசத்தின் பிரதான வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஐ.எம்.ஜவாஹீர் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அவசர மரண விசாரணை அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளாமல் சடலத்தை ஒப்படைத்திருக்கின்றார்.
அந்த குழந்தையின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாமலேயே அவரால் சடலம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினை தீவிரமடைந்து அதனை வேறு வழியில் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னரே இது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நாம் தீர்மானித்தோம்.
மீளாய்விற்கான கால அவகாசம் வழங்கப்படும். அதற்காக சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, அவசர மரண பரிசோதனை விசேட நிபுணரடங்கிய குழு நியமிக்கப்படும்.
அந்தக் காலப்பகுதிக்குள் காரணம் இனங்காணப்படாமல் உயிரிழக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது என வாதிடுபவர்கள் தமது நியாப்படுத்தல்களை முன்வைக்க முடியும். அவ்வனைத்து காரணிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
ஆனால் மருத்து அடிப்படையில் பார்க்கும் போது அது அத்தியாவசியமானதொன்றாகும். மரணத்துக்கான காரணம் தெரிந்தால் அது அத்தியாவசியமற்றது.
ஆனால் காரணம் தெரியவில்லை எனில் பிரேத பரிசோதனை அவசியமாகும். ஏனைய சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று உலகம் எதிர்பார்க்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM