மூக்குக் கண்ணாடியை முறையாக பராமரிப்பது அவசியம்!

Published By: Digital Desk 2

29 Apr, 2025 | 05:05 PM
image

டிஜிட்டல் யுகத்தில் மூக்குக் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும்  மூக்குக் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.

மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றும்போது மெல்லிய கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

காலப்போக்கில் கண்ணாடியின் இணைப்புகள் தளரலாம், எனவே அவற்றை அவ்வப்போது சரிபார்த்து, முகத்தில் நன்றாக பொருந்தும்படி திருத்திக்கொள்ள வேண்டும்.

ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசௌகரியம் ஏற்படுத்தும்.

கண்ணாடிகளை சரியாக பராமரிப்பது, நீண்ட நாள் பயன்பாட்டிற்கு உதவுவதோடு, கண்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right