ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப் பெற்றார் - அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

29 Apr, 2025 | 05:24 PM
image

(எம்.மனோசித்ரா)

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். எனவே அதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிந்திருந்தமை சாதரணமானதாகும். இது ஒரு இரகசிய தகவல் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் விசேட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது சகல சமூக வலைத்தள பக்கங்களிலும் தன்னால் அன்றைய தினம் முன்னிலையாக முடியாது என்றும், 17ஆம் திகதி முன்னிலையாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒரு பொதுத் தகவலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதன் ஊடாகவே அந்த தகவலை அறிந்திருப்பார். அவர் இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்ததை மறந்தே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். மாறாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. ரணில் ஆணைக்குழுவில் முன்னிலையாவது இரகசிய தகவல் அல்ல.

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவரது சமூக வலைத்தளங்களில் இந்த தகவலைப் பகிர்ந்த பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதனை விடுத்து இந்த விவகாரத்தில் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ எந்தவகையிலும் தலையிடவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப்...

2025-05-21 02:37:24
news-image

காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு...

2025-05-21 02:32:19
news-image

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த...

2025-05-21 02:22:18
news-image

இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின்...

2025-05-21 02:17:46
news-image

பிரதமருக்கும், வட-கிழக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

2025-05-20 23:44:10
news-image

இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகத்துக்கான விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது...

2025-05-20 15:39:03
news-image

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார் நியூஸிலாந்து...

2025-05-20 21:48:32
news-image

சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி இராணுவ...

2025-05-20 20:56:19
news-image

யாழ். நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள...

2025-05-20 21:14:03
news-image

வடக்கு மக்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-05-20 16:03:34
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-05-20 23:16:49
news-image

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா...

2025-05-20 19:50:14