இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினரின் கோரிக்கை என்பது வாழ்வியல் பற்றுக்கான தேவைகள் என்பதைவிட .. நாளாந்த தேவைகளுக்கான வேண்டுகோளாக மாற்றம் பெற்றிருக்கிறது. எனக்கு இது நடைபெற வேண்டும்... எனக்கு இந்த விடயம் இந்த தருணத்தில் இப்படி நடைபெற வேண்டும்... என இறைவனிடம் நிபந்தனைகளுடன் கூடிய வேண்டுகோளை சமர்ப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் அதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன் மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : அகல் விளக்கு - கடுகு எண்ணெய் - தாமரைத் தண்டு திரி- ஆறு கிராம்பு-.
இந்த பூவுலகில் விருட்சங்கள் என்பது பிரபஞ்சத்தின் ஆற்றலை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றுதான் நம்முடைய புராணங்கள் சொல்கிறது. அதனால் தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் விருட்ச வழிபாட்டை பரிகாரமாக முன்மொழிந்தனர்.
இந்தத் தருணத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்றால்... வியாழக்கிழமைகளில் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி அருகில் இருக்கும் அரச மரத்திற்கோ அல்லது அரச மரத்தடி விநாயகர் சன்னதிக்கோ சென்று.. அங்குள்ள அரச மரத்தின் அடிப்பகுதியில் கடுகு எண்ணெயை ஊற்றி அகல் விளக்கேற்ற வேண்டும்.
அந்த விளக்கில் ஆறு கிராம்புகளை இட வேண்டும். விளக்கு எரியும் போது 24 நிமிடங்கள் நீங்கள் அரசமரத்திடம் உங்களுடைய கோரிக்கை குறித்து பேச வேண்டும். அரச மரம் உங்களுடைய உரையாடலை முழுவதுமாக கேட்டு இந்த பிரபஞ்சத்திற்கு தெரிவிக்கும். இந்த பிரபஞ்சம் உங்களது கோரிக்கையை கேட்டு, அதனை நிறைவேற்றும். இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 48 நாட்கள் வரை செய்து வர நீங்கள் நினைத்த விடயம் நடப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM