எம்மில் பலரும் தற்போது இறுக்கமான ஆடைகளை அணிவது தான் ' பெசன் ' என கருதுகிறார்கள். அதிலும் ஆண்கள் தங்களுடைய இனப்பெருக்க உறுப்பு பாதிக்கப்படும் அளவிற்கு இறுக்கமான ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். இவர்களில் சிலருக்கு திடீரென்று அவர்களுடைய விதைப்பையில் வீக்கமோ... வலியோ.. ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் எபிடிடிமைடிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய சிறுநீரை வெளியேற்றும் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் விதைப்பையில் உயிரணுக்களை சேகரித்து வைத்திருக்கும் குழாயாக இயங்குகிறது எபிடிடிமிஸ். விதைப்பையின் கீழ் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் இந்த குழாய் பாலியல் தொற்று காரணமாகவும், பாக்டீரியா தொற்று காரணமாகவும் பாதிக்கப்பட்டு வீக்கமடைகிறது. சிலருக்கு இவை வலியையும் ஏற்படுத்துகிறது.
விதைப்பை வீக்கம், நிறமாற்றம், அதன் வெப்ப நிலையில் மாற்றம், வலி, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம் , வயிற்றின் கீழ் பகுதி அல்லது இடுப்பு பகுதியில் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால்.. உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டும்.
பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் இத்தகைய பாதிப்பின் காரணமாக விதைப்பை வீக்கம் அடையும். சிலருக்கு வேறு தொற்று பாதிப்புகளாலும் .. திடீரென்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் காயம் ஏற்படுவதாலும் ... காச நோயாலும் ...இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக முழுமையான நிவாரணத்தை பெறவில்லை என்றால் தங்கள் இணையருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத நிலை உருவாகும். இதனால் மன அழுத்த பாதிப்பு உண்டாகுவதற்கான சாத்திய கூறும் அதிகம்.
இதன் போது வைத்தியர்கள் குருதி பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் நவீன மருத்துவ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர்: குரு பாலாஜி
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM