வெசாக் தானசாலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு 

Published By: Digital Desk 3

29 Apr, 2025 | 10:18 AM
image

எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு அமைக்கப்படும் அனைத்து தானசாலைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

தானசாலைகள்  அமைக்கப்படும் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

தானசாலைகளை பதிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சமில் முத்துக்குடா, 

நாடளாவிய ரீதியில் தானசாலையை அமைக்க விரும்பும் எவரும் தேவையான வழிகாட்டுதல்களை பெற்று தங்கள் பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யும் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

எனவே, அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகரை (PHI) சந்தித்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான ‘தானசாலைகளை’ அமைக்க தேவையான அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுகளில் வழங்கப்படும் உணவின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, அனைத்து தானசாலைகளும் பொது சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இந்த பரிசோதனை நடவடிக்கைகள் நிகழ்வுக்கு முன்னரும், உணவு விநியோகம் செய்யப்படும் நாளிலும்  நடத்தப்படும்.

நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு குடி நீரின் தரம் மற்றும் விநியோக செய்யப்படும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்,” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:35:34
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29