பாதுஷா செய்வது எப்படி என்று பார்ப்போம்.....
தேவையான பொருட்கள் :
- மைதா - 3 கப்
- வனஸ்பதி - ஒரு கப்
- தயிர் - 2 மேசை கரண்டி
- சமையல் சோடா -அரை தேக்கரண்டி
- சர்க்கரை - 2 கப்
- தண்ணீர் - ஒரு கப்
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
- பாதாம், முந்திரி, குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை :
1. சர்க்கரையும் தண்ணீரும் கலந்து கொதிக்கவிட்டு, சிறிது பால் சேர்த்து அழுக்கு நீக்கவும்.
2. பிசுக்கு பதம் வந்தவுடன், கீழே இறக்கி வைக்கவும்.
3. பாத்திரத்தில் மைதாவைக் கொட்டி, கெட்டியான வனஸ்பதியை விரல் நுனியால் உதிரியாக ஆகும் வரை கலக்கவும்.
4. தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்கத் தேய்த்து, மைதாவுடன் கலந்து பிசையவும்.
5. கூடுமானவரை தண்ணீரே சேர்க்க வேண்டாம். சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, வட்டமாக ஷேப் செய்யவும்.
6. கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சர்க்கரைப் பாகில் (சூடாக இருக்க வேண்டும்) அமிழ்த்தி எடுக்கவும்.
7. இறுதியாக முந்திரி, பாதாம், குங்குமப்பூ சேர்த்து அலங்கரிக்கவும். பாதுஷா தயார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM