மேஷம்
எதையும் விரைவாக செய்ய நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சூரியன் உச்சி பெற்றும் ராசிநாதன் நீசம் பெற்று இருந்தாலும் சந்திரன் உச்சம் பெறுவதால் நீச பங்க ராஜயோகம் என்றபடி சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். இதுவரை விரையஸ்தானத்தில் இருந்து வந்த ராகு லாபஸ்தானத்தில் அமர்வதாலும் லாபாதிபதியுடன் சம்மந்தம் பெறுவதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த இடத்தில் விரைவில் பணம் வந்து சேரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும். குடும்ப சண்டைகளை ஓரங்கட்டி விட்டு இருவரும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
அரசியலில் சிலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் சிறப்பை பெறுவீர்கள். உங்களை மதிக்காமல் இருந்த சிலர் உங்கள் மீது மதிப்பை வைத்து வரவேற்பார்கள். பொது வாழ்வில் சிலருக்கு ஈடுபாடு உண்டாகும். நிலையான சூழ்நிலைகள் உண்டாகும்.
குரு பெயர்ச்சியாகி மூன்றாமிடம் செல்வதால் இம்மாத இறுதியில் உங்களின் முயற்சிகள் நல்ல பலனை தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்வது பல காரியங்களில் தடை உண்டாகும் என்றாலும் குருவை கேது பார்வை இடுவதால் தன்னையும் மீறி பல காரியம் நடக்கும். சொல்லின் செயல் திறன் பெருகும்.
வீடு மனை விற்பனை செய்பவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். முக்கிய நண்பரின் சந்திப்பு உங்களுக்கு ஊக்கம் தரும். சிறந்த பேச்சு திறன் உங்களுக்கு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பை பெறுவீர்கள். வருமானத்திற்கு அதிகமான செலவுகளை குறைத்து கொண்டு மேன்மை பெறுவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமையும். தேவைகளுக்கு பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ மாலையும் மிளகு கலந்த தயிர் அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மையை தரும்.
ரிஷபம்
சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என திட்டமிடும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானதிபதியும், யோகாதிபதியான சனி பகவான் ராகுவுடன் இணைவு பெறுவதால் தொழிலில் மேன்மை உண்டாகும். மந்த நிலையில் இருந்து வந்த செயல்கள் சிறப்பாக இயங்கும் முதல் பகுதியில் குருவுடன் சந்திரன் இணைவு பெறுவதால் கொடுக்கல் - வாங்கலில் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும். தெரிந்த பல விடயங்களில் காலம் தாழ்த்தி வந்த உங்களின் காரியம் சிறப்பாக இருக்கும். முதலீடு இல்லாத தொழிலில் கூடுதலான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் இருந்து வந்த பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு அரசியல் பிரவேசம் உண்டாகும். குறைந்த முதலீடுகள் மூலம் சில தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். சுமை தாங்கியாக இருந்த நிலைமாறி அதிலிருந்து விடுபடுவீர்கள். கருத்துக்களை தெரிவிப்பதில் தயக்கம் காட்டமாட்டீர்கள். ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்காமல் ஆக்கபூர்வமான பல விடயங்களை உணர்ந்து செயற்படுவீர்கள்.
11-05-2025 பின்பு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் மறைவு ஸ்தானங்களை பார்ப்பதால் தடைபட்ட பல காரியங்கள் சிறப்பாக இயங்கும். புதிய நண்பர்களின் தொடர்புகள் உங்களை சிறப்பாக செயற்பட வைக்கும். நல்ல செயல்களை செய்வதும் கடமை உணர்வுகளுடன் பணியை செய்வதும் உங்களுக்கு நிறைய பிடிக்கும். அதனை தவறாமல் செய்து வந்து பாராட்டு பெறுவீர்கள். யாரையும் மதித்து நடக்கும். பண்புகள் சிறப்பைத் தரும். கருத்து வேறுபாடுகளை மறந்து எல்லோரையும் அனுசரித்து நடப்பீர்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருக்கும் யாரையும் அனுமதிக்க மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 6 - 07:30 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி அரிசி மாவு சர்க்கரை வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் கைகூடும்.
மிதுனம்
உங்களின் எண்ணங்களை செயல்படுத்த பாடுபடும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்தும், தனஸ்தானத்தில் லாபாதிபதியும் அமர்ந்து இருப்பது செய்யும் தொழிலில் சிறப்பான நற்பலன்கள் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமையும், கூட்டு தொழிலும் சிறப்பாக அமையும். எடுத்த காரியம் விரைவில் வெற்றியை தரும்.
உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு இருந்து பொருளாதாரத்தில் விரையத்தையும் முயற்சிகளுக்கு தடையும் வந்த நிலைமாறி ஜென்ம குருவாக இம்மாதம் வருவதால் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும். திருவாதிரை நட்சத்திர காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எதையும் முன்கூட்டியே யோசித்து செய்யும் செயல்படும் வாய்ப்பு அமையும். அரசியல் ஆலோசகராக இருந்து புதிய அனுகுமுறைகளை செயல்படுத்துவீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பது வெளிநாடு சார்ந்த தொடர்புகள் உங்களை ஊக்கபடுத்தும். குரு பார்வை இடும் இடமான ஏழாமிடம் உள்ள கூட்டு தொழில் சிறப்பாக அமையும் உறுதியுடன் செயல்படுவதால் நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் வளம் பெறுவீர்கள். கலைத்துறையினர் சிறப்பாக நிகழ்ச்சிகளை செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து அதில் கவனம் செலுத்துவீர்கள்.
முக்கிய நிகழ்வுகளில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். சனி / ராகு பாக்கியஸ்தானத்தில் இணைவு பெறுவதால் எதிர்பாராத பல நிகழ்வுகள் ஆச்சரியம் ஊட்டும் வகையில் அமையும். திறம்பட செயல்படும் உங்களுக்கு ஊக்கபடுத்தும் விதமான நல்ல காரியம் அடிக்கடி நடக்கும். பிறரின் நலனின் அக்கறையை எடுத்துக் கொள்ளும் உங்களும் வெள்ளியை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக பரிகாரம் செய்து நவதானியம் வைத்து 9 தீபம் நல்லெண்ணெயில் ஏற்றி வழிபட்டு வர பல நல்ல காரியங்கள் சிறப்பாக அமையும்.
கடகம்
சொல்லையே செயலாக அமைத்துக்கொண்டு செயல்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியன் உச்சம் பெறுவதும் மாத துவக்கத்தில் குரு லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழில் சிறப்பாக அமையும். ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டு இருக்கும். சாதிக்க வேண்டுமென்று நினைத்து பலதோல்விகளை சந்தித்திருந்தாலும் அதனை படிப்பினையாக ஏற்று வளம் பெறுவீர்கள்.
லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் பெண்களால் ஆதாயம் பெறுவீர்கள். மனைவி மூலம் சிலருக்கு உதவி கிடைக்கும். சிறந்த பேச்சாளராகவும், அறிவு களஞ்சியமாகவும் திகழ்வீர்கள். அரசியலில் நீங்கள் இழந்ததை மீண்டும் பெறுவீர்கள். கோபங்களை குறைத்து அனைவரிடமும் அன்பு செலுத்துவீர்கள். கிடைத்த பல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
திறமையான பல வாய்ப்புகளையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள தயங்கினாலும் அது உங்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். அந்த நாளில் புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களின் வருங்கால நலனுக்கு பயனுள்ளதாக அமையும். கலைத்துறையினர் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். உங்களின் உழைப்பு வீண் போகாது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி தருவீர்கள். தொழிலில் முன்பைவிட சற்று லாபகரமாக இருக்கும். வருமானத்திற்கு தகுந்த செலவுகளும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு அரளிபூ மாலை இட்டு எள் கலந்த அன்னம் வைத்து வழிபட்டு வர தடைபட்ட சகல காரியமும் வெற்றியை தரும்.
சிம்மம்
எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாத சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சூரியன் ராசிநாதன் உச்சம் பெறுவதும். தொழில் ஸ்தானத்தில் மாத துவக்கத்தில் சந்திரனுடன் குரு இணைவு பெறுவதும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னேற்றம் உண்டாகும். இதுவரை முடங்கி கிடந்த பல காரியம் செயல்பட துவங்கும். காரணமே இல்லாத விடயங்களுக்கு தொடர்பை துண்டித்து கொண்டவர்கள் இனி தொடர்பை உண்டாக்கி கொள்வார்கள்.
இந்த மாத குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு சிறப்பான பலனாக அமையும். புதன் வீட்டில் குரு அமர்ந்த மூன்று ஐந்து ஏழாமிடங்களை பார்வை இடுவதால் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். பூர்வீக சொத்துகள் சம்மந்தமான காரியம் சிறப்பாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு உண்டாகும். பல நிலங்களை ஆவணப்படுத்தும் வேலைகளை செய்வீர்கள். களத்திர ஸ்தானம் சனி / ராகு சேர்க்கையை குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
சாதாரணமாக விடயத்தை கூட ஆழமாக சிந்தித்து செயல்படுவீர்கள். கருத்துகளை சொல்ல தயக்கம் காட்டமாட்டீர்கள். எதை செய்தாலும் அதில் வேற்றுமையின்றி செயல்படுவீர்கள். சில நேரம் உங்களுக்கு உதவி செய்ய பலர் முன் வருவார்கள். கலைதுறையினருக்கு மந்தமான நிலை உண்டாகும். பணபுழக்கம் தாராளமாக இருக்கும். சிறந்த தலைமை பொறுப்பாளர்களின் பழக்கம் உண்டாகும். அரசியலில் உங்களின் நிலைமையை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு பைரவருக்கும், துர்க்கையம்மனுக்கு விளக்கு போட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
கன்னி
காரியத்தில் கவனம் செலுத்தி சரியாக செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனாதிபதி சுக்கிரன் ராசியை பார்ப்பதும் ராசிநாதன் புதன் தனஸ்தானத்தை பார்ப்பதும் பொருளாதார நிலை சீராக இருக்கும். எட்டாம் அதிபதி லாபஸ்தானத்தில் இருப்பதால் வரவேண்டிய பணம் வராமல்தேங்கி நிற்கும். முன் பகுதியில் குரு பார்வை இருப்பதால் செயல்பாடுகளில் உறுதி தன்மை இருக்கும். கடந்த கால தோய்வு நிலை மாறி சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
இதுவரை ஜென்ம கேதுவாக இருந்தவர் விரையஸ்தானத்திற்கு சென்று விட்டதால் வெளிநாடு தொடர்புகள் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளை உருவாக்கி கொள்வீர்கள். எதையும் முயற்சியை செய்தால் வெற்றி கிடைக்கும். பொது நலன் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும். புத்துயிர் பெற்றவர் போல் பொலிவுடன் செயல்படுவீர்கள். எந்த தோல்வியையும் பாடமாக எடுத்துக் கொள்வீர்கள். தொலை தொடர்புகள் மூலம் உங்களின் வளர்ச்சியை உறுதி செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். தங்களின் சொத்துகள் சம்மந்தமான ஆவணம் சரி செய்து கொள்ளும் வாய்ப்பு அமையும் புதிய நண்பர்களின் தொடர்புகள் நல்ல பலனை பெற்றுத் தரும். துணிச்சலான உங்களின் செயல் மூலம் நல்ல பலனை பெற்று தரும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொன், பொருள், புகழ் எல்லாம் நீங்கள் தேடிச் சென்றால் கிடைக்கும் தானாக வராது. முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசியலில் நல்ல நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆலோசகராக செயல்படுவீர்கள். தேவைக்கு பணவரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து அரளிப்பூ மாலை இட்டு அன்னதானம் செய்து விட்டுவர அனைத்து காரியம் சிறப்பாக அமையும்.
துலாம்
விடாமுயற்சியும், தொடர் செயல்பாடும் கொண்ட துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி சூரியன் பார்வை பெறுவதும் ராசிநாதன் ஆறாமிடத்தில் இருந்து விரையத்தை பார்ப்பதும் பூமி சார்ந்த விடயங்கள் நன்றாக அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சூழ்நிலைகள் சாதகமாக அமையும். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்வது உங்களின் தொழிலில் வளம் பெறும் வாய்ப்பு அமையும். எட்டாமிடத்தில் சந்திரனுடன் குரு மாத துவக்கத்தில் இருப்பது பணபுழக்கத்தில் சில தடைகள் வந்து பிற்பகுதியில் சிறப்பாக அமையும்.
அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அமையும். குடும்ப ஒற்றுமை சில நேரம் சீராக இருக்கும். தீராத கடன்கள் படிப்படியாக குறையும். எதிரிக்கும் நீங்கள் உதவி செய்வீர்கள். பல நாட்கள் காத்திருந்த காரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் உங்களுக்கு வரவேற்பு இருக்கும். சில தெய்வ வழிபாடுகள் செய்வீர்கள். முக்கிய முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு அடிக்கடி வெளியூர் சென்று வருதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்தல் உண்டாகும். பெண்களுக்கு புத்துணர்வு பெறும் சில காரியம் கைகூடும். திருமண தடைகள் நீங்கி திருமண பேச்சுகள் கைகூடும். எதிர்ப்புகள் மறையும். சனி / ராகு இணைவு பெறுவது சிலருக்கு சாதகமாக அமையும். இம்மாதம் உங்களின் தேவைகளுக்கு வருமானம் வரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ வைத்து துவரை அன்னம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியங்களும் கைகூடும்.
விருச்சிகம்
பாதுகாப்பான வளையத்தை எப்போதும் உருவாக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு மாத துவக்கத்தில் சந்திரனுடன் குரு இணைவு பெற்று ராசியை பார்ப்பது உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து சனியை பார்ப்பது உங்களின் அர்த்தாஷ்ட சனியின் கஷ்டம் நீங்கும். பிற்பகுதியில் குரு பெயர்ச்சி ஆகி பார்வை சனி / ராகு மீது அமைவதால் சகல கஷ்டங்களும் நீங்கும்.
உங்களின் ராசிக்கு குரு அட்டமத்தில் அமர்வது பண புழக்கத்தில் சில தடைகள் வரும். உங்களின் பெயரில் பணத்தை வைத்திருக்காமல் நம்பிக்கையானவர் கணக்கில் வைத்து செயல்பட்டால் உங்களுக்கு கஷ்டம் வராது. கொடுக்கல் வாங்கலில் சொன்னபடி நடக்க முடியாமல் போகும் என்பதால் யாருக்கு முழு உத்திரவாதம் சொல்லாமல் இருப்பது நல்லது. காரிய அனுகூலம் சிறப்பாக அமையும். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்ப்பது சிறப்பு.
கலைத்துறைியனருக்கு எதிர்பாராத நன்மை உண்டாகும். சிலர் பல காலம் காதலை சொல்ல தயங்கிய நிலைமாறி சொல்லி விடுவீர்கள். இனி உங்களின் நடை சுறுசுறுப்பாகவும் இருக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்வது புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடும். எண்ணத்தை பலபடுத்திக் கொள்வீர்கள். சரியான கால கட்டம் வரும் வரை எதையும் முன்வந்து செய்வதை தவிர்த்தால் தேவையற்ற பண இழப்பு வராது. நெருக்கமான நண்பர் நடவடிக்கைகளை கவனிப்பீர்கள். இம்மாதம் பண புழக்கம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, பல வர்ணம்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் பைரவர் வழிபாடு செய்து உளுந்து வடை மாலை சாற்றி முந்திரி பருப்பு வைத்து 3 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
தனுசு
தனக்கென்று ஒரு பாணியை கடைபிடிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியுடன் யோகாதிபதி சூரியன் இணைவு பெற்று உங்களின் லாபஸ்தானத்தை பார்ப்பதும் மாத முற்பகுதியில் குரு ஆறாமிடத்தில் இருந்து ஏழாமிடம் அமர்ந்து ராசியை பார்வை இடுவதும் உங்களின் சகல வித காரியமும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். எதையும் துணிவுடன் செயல்படும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும்.
முயற்சி ஸ்தானத்தில் சனி / ராகு அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலிலும், முயற்சிகளிலும் நற்பலன்களை பெற்று தரும். குரு பார்வைக்கு பின்பு இன்னும் சிறப்பான நற்பலன் தரும்.அட்டம ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது பொருளாதாரத்தில் பண புழக்கம் குறைவாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சிலர் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும். அரசியலில் சிலருக்கு உதவிகள் கிடைக்கும்.
எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்பட துவங்குவீர்கள். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் துவங்க சிலருக்கு வாய்ப்புகள் அமையும். சரியான பாதையில் சென்று வாழ வேண்டுமென்ற எண்ணம் உதயமாகும். பொது வாழ்வில் ஆர்வம் இருக்கும் தன்னை சார்ந்தவர்களை வளர்த்துவிட நினைப்பீர்கள். வங்கி மூலம் கடன் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். உறவுகளை பலபடுத்தி கொள்ளும் முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பண புழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் நவகிரகங்களுக்கு 9 விளக்கு ஏற்றி தயிரன்னம் வைத்து தானம் செய்து விட்டு வர காரிய தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
மகரம்
சுயநலமின்றி பொது நலன் கொண்டு செயல்படும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் ராகு இணைவு அமைவது. தைரியமும் துணிச்சலும் கொண்ட எந்த எதிர்வினையையும் எதிர்க்கும் ஆற்றல் உண்டாகும். சர்ச்சைக்குரிய விடயங்களை எதிராளி பலம் அறிந்து சரி செய்துவிடுவீர்கள். போட்டி, பொறாமை கொண்டு செயல்படுபவர்களின் எண்ணம் ஈடேறாதபடி செய்வீர்கள். மக்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். அமைதி சூழ்நிலையை மிகவும் விரும்புவீர்கள்.
தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பது அவர்களின் நன்மைகளுக்காக உடல் உழைப்பை தந்து உதவி செய்வது போன்றவைகளை பின்பற்றுவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வளர்ச்சி உதவியாக இருக்கும். அரசியலில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்த சேரும். எதையும் கவனமுடன் செயல்பட்டு வருவீர்கள். குரு பார்வை மாத துவக்கத்தில் இருக்கும். ஆறாமிடத்தில் குரு மறைவது. உங்களின் ராசிக்கு மேலும் நல்ல பலனை பெற்று தரும்.
பனிரெண்டாம் அதிபதி மறைவது சிறப்பு கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற சோதிட மொழிக்கு ஏற்ப பல காரியங்கள் அதிசயமாக நடக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது உதவி செய்வீர்கள். கலைதுறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். கடமையைச் செய்து பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள். வழக்கத்துக்கு மாறாக காரியங்களில் வளர்ச்சியை பெற்று நலம் பெறுவீர்கள். இம்மாதம் பண புழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ளவும், நாக தேவதை வழிபாடு சிறப்பாக பலனை பெற்றுத் தரும்.
கும்பம்
எதையும் சுறுசுறுப்பாக செய்யும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் / ராகு ராசியில் இணைவதும் தனஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று அமர்வதும். உங்களின் ராசிக்கு சிறப்பான நற்பலன்களை பெற்று தருவார்கள் சனி / ராகு இணைவு யாரை பற்றியும் கவலைபடாமல் எதிலும் துணிச்சலுடன் தானே செயல்படும் பக்குவம் பெறுவீர்கள். குடும்ப நலன் கருதி சிலருக்கு உறுதுணையாக சென்று உதவிகள் செய்வீர்கள்.
உழைப்பை மூலதனமாக செய்து பலவித பணிகளை செய்து வருமானம் பெறுவீர்கள். ஏற்கனவே செவ்வாய் எட்டாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் போராடி எதையும் வெற்றி காண்பீர்கள். எளிதில் நடப்பது கூட சில சிரமத்திற்கு பின் பலன் தரும். குரு பெயர்ச்சிக்கு பின்பு குரு ராசியை பார்ப்பது உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். எதையும் துணிச்சலுடன் செய்வீர்கள். சூரியன் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்து ஊக்கபடுத்துவார். சரியான நேரத்தில் உங்களின் இலக்கை எட்டி பிடிப்பீர்கள். புதுவிதமான முயற்சிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.
ஏழாமிட கேது குடும்பத்தில் நன்மை பெற்று தரும். கலைதுறையினருக்கு நல்ல நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தங்கள் உருவாகும். சிறுவர்களின் கோரிக்கை விளையாட்டு ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணர்ந்து அதற்கான பலனை அடைய உறுதியுடன் செயல்படுவீர்கள். யாரையும் நம்பி கொண்டு இருக்காமல் நீங்கள் உங்களின் செயலை கவனமுடன் செய்து நற்பலன் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு மலர் வைத்து வேலுக்கு பால் அபிசேகம் செய்து மயிலுக்கு இரை போட்டு தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.
மீனம்
தன்னம்பிக்கையுடன் எதிலும் கவனம் செலுத்தும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெறுவதும். ராசிநாதன் மாத துவக்கத்தில் மூன்றில் அமர்ந்து பார்வை இடுவதும் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். துணிச்சலுடன் செயல்படும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். காரணம் இன்றி எந்த காரியத்திலும் ஈடுபட மாட்டீர்கள். தெய்வ வழிபாடுகளை முழுமையாக நம்புவீர்கள். சோதனைகளை சாதனையாக்கி கொள்வீர்கள்.
தனாதிபதி செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பது நல்ல பலனை பெற்று தரும். விரையாதிபதி சனியுடன் ராகு இணைவு பெறுவது பொருளாதார இழப்புகள் குறையும். இனி உங்களின் தொழிலில் நல்ல மாற்றம் உருவாகும் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பது உங்களுக்கு சாதகமாக பலன் பெற்று தரும். முன் யோசனைகளுடன் செயல்படுவீர்கள். கருத்துகளை வெளிபடுத்துவதில் தயக்கமின்றி செயல்படுவீர்கள். ஆன்மீக பயணம் சிறப்பாக அமையும்.
கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆர்வம் உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். துணிச்சலுடன் உங்களின் செயல்களை செய்து முடிப்பீர்கள். ஈடுசெய்ய முடியாத இழப்பு கடந்த காலத்தில் இருந்து வந்தது. இனி அதற்கு அவசியமில்லாமல் போகும். சொன்ன சொல்லை காப்பாற்றிக் கொள்வீர்கள். சனி / ராகுவை குரு பார்ப்பது உங்களுக்கு மேலும் நல்ல பலனை பெற்று தரும். சிறு உடல் உபாதைகள் வந்து மறையும். புதிய நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டு செயல்படுவீர்கள். இம்மாதம் பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள், மிளகு கலந்த அன்னம் வைத்து தானம் கொடுத்து விட்டு வர உங்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும்.
கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM