தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' ஜோரா கைய தட்டுங்க ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குவர் வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜோரா கைய தட்டுங்க' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, சாந்தி ராவ், 'அருவி' பாலா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மது அம்பட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். அருணகிரி- நிதின் கே. ரோஷன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாமா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாகீர் அலி தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டில் வெளியான ' போட் 'எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதால் அவர் மீண்டும் கதையின் நாயகனாக - தனி கதாநாயகனாக நடித்திருக்கும் ' ஜோரா கைய தட்டுங்க ' எனும் திரைப்படம் வெளியாவதால் இந்த திரைப்படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM