எதிர்பாராத அளவிற்கு பாரிய வெற்றியை வழங்கிய 'சச்சின்' திரைப்படத்தின் ரீரிலீசிக்கு பிறகு அஜித் குமார் - ஐஸ்வர்யா ராய் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' சூர்யா நடித்த 'காக்க காக்க' ஆகிய படங்களை இந்த ஆண்டிற்குள் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன்'' என பிரபல படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருக்கிறார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய்- ஜெனிலியா நடிப்பில் உருவாகி, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடந்த பதினெட்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் விஜயின் இளமை குறும்புத்தனமிக்க நடிப்பால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
இதனால் இந்த திரைப்படம் மறு வெளியீட்டிலும் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நிகழ்வு ஒன்றினை ஒருங்கிணைத்தனர். இதில் நடன இயக்குநர் ஷோபி , இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ். தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, '' கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் 'கில்லி' எனும் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி 50 நாட்கள் திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடி வசூலில் 50 கோடியை கடந்தது. விஜயின் ரசிகர்களுக்காக அவர் நடித்த 'சச்சின் 'திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்தோம். ஆனால் ரசிகர்களின் வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது.
சச்சின் படத்தின் முதல் வெளியீட்டிலேயே எனக்கு கௌரவமான லாபம் கிடைத்தது. தற்போது ரீ ரிலீஸ் செய்திருக்கும் போது நான் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். மேலும் இந்த ஆண்டில் அஜித் குமார் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' சூர்யா நடித்த 'காக்க காக்க' ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM