ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு; காயமடைந்தவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்

Published By: Vishnu

28 Apr, 2025 | 08:59 AM
image

ஈரானின்  பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள  மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில்   சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால்  ஏற்பட்ட  பாரிய வெடிப்பு  சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு,  1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில், ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் கொள்கலன்களில் இரசாயனங்கள் முறையாக சேமிக்கப்படாததே வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்துள்ளார்.

ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னர் துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இந்த துறைமுகத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார், மேலும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை (27) பார்வையிட்ட அதேவேளை விசாரணைகளை நடத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த...

2025-05-20 14:04:31
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப்...

2025-05-20 13:01:50
news-image

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை...

2025-05-20 11:51:44
news-image

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் -...

2025-05-19 14:09:28
news-image

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு...

2025-05-19 12:37:05
news-image

பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர்...

2025-05-19 10:34:54
news-image

ஜோ பைடனிற்கு புற்றுநோய்

2025-05-19 06:37:12
news-image

ஹைதராபாத்தில் சார்மினார் நினைவுச் சின்னம் அருகேபயங்கர...

2025-05-18 17:36:36
news-image

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள் - 100க்கும்...

2025-05-18 13:56:36
news-image

273 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியது ரஸ்யா...

2025-05-18 12:51:45
news-image

கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட...

2025-05-18 10:33:54
news-image

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய...

2025-05-18 08:51:29