‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ புத்தக வெளியீட்டு விழா!

Published By: Digital Desk 2

27 Apr, 2025 | 07:43 PM
image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ என்ற புத்தகம் வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள விக்டோரியா வீதியில் அமைந்துள்ள தேசிய நூலக வாரியத்தில் புத்தக வெளியீட்டு விழா இடம்பெற்றது. 

இந்த புத்தகத்தை சௌந்திர நாயகி வைரவன் எழுதியுள்ளார். 

187 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை லிட்டில் இந்தியா கடைக்கார்கள் மரபுடைமை சங்கம் வெளியிட்டது. 

இந்த புத்தகத்தில் லிட்டில் இந்தியா உருவான கதையிலிருந்து அது மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுகின்றது, அங்கு அமையப்பெற்றுள்ள கோயில்கள், கலைக்கூடங்கள், இப்பொழுது லிட்டில் இந்தியா பகுதியில் வியாபாரம் எவ்வாறு செயற்படுகின்றது போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. 

பல வண்ண புகைப்படங்களோடு மக்களை கவரும் வகையில், பல செய்திகள் உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக இந்த புத்தகம் திகழ்கின்றது.

இந் நிகழ்வில் சௌந்திர நாயகி வைரவன் கருத்து தெரிவிக்கையில், 

இது போன்ற வரலாற்றுப் புத்தகங்கள் வெளியீட்டால் இளம் தலைமுறையினர், அவர்கள் மூதாதையர் நடந்து வந்த பாதையைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக இந்த புத்தகத்தை எழுதினேன்.

மேலும் லிட்டில் இந்தியா பகுதியில் பல அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டு வெளியீடு கண்டுள்ளது என்றார். 

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜியோ அவரது உரையில்,

சௌந்தரநாயகி மிக நுணுக்கமாக லிட்டில் இந்தியா பற்றி பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புத்தகத்தை அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றார். 

இந் நிகழ்வில், சிங்கபூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ஜியோ, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே மற்றும் பல சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34