bestweb

உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? ; மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் விசேட செவ்வி

Published By: Digital Desk 2

27 Apr, 2025 | 11:03 AM
image

நேர்­கண்­ட­வர்கள்: ரொபட் அன்­டனி, இரா­ஜ­துரை ஹஷான்

உள்­ளூ­ராட்சிமன்ற தேர்­தலில் மக்கள் கட்­டா­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும்.   தமது பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான பிர­தி­நி­தி­களை மக்கள் நிச்­ச­ய­மாக தெரிவு செய்ய வேண்டும். மக்கள் இந்த தேர்­தலில் ஆர்­வத்­துடன் வாக்­க­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது என்று மேல­திக தேர்தல் ஆணை­யாளர் சிவ­சுப்­பி­ர­ம­ணியம் அச்­சுதன் தெரி­வித்தார்.

வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே சிவ­சுப்­பி­ர­ம­ணியம் அச்­சுதன் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினார்.

தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள்,  வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை, எவ்­வாறு வாக்­க­ளிப்­பது, எவ்­வாறு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்,  கலப்பு தேர்தல் முறை எவ்­வாறு நடை­பெறும் என்பன உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பா­கவும் மேல­திக தேர்தல் ஆணை­யாளர் அச்­சுதன் விளக்­க­ம­ளித்தார்.

‘‘தேர்தல் என்­பது ஜன­நா­ய­கத்தின் மிக முக்­கி­ய­மான ஒரு விட­ய­மாகும். எனவே சக­லரும் இந்த தேர்­தல்­களில் வாக்­க­ளிக்க வேண்டும்.  வாக்­க­ளிப்­ப­தற்கு தேவை­யான ஆவ­ணங்­களை கொண்டு செல்ல வேண்டும்’’ என்று அவர் சுட்­டிக்­காட்­டினார்.  

 மேலும் இந்த தேர்­தலில் விருப்பு வாக்கு முறைமை இல்லை என்­பதால்  கட்­சிக்கு மட்­டுமே வாக்­க­ளிக்க வேண்டும். இது தொடர்­பாக வாக்­கா­ளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் அச்­சுதன் சுட்­டிக்­காட்­டினார்.

‘‘உள்­ளூ­ராட்சித் தேர்தல் முறை­மையில் விருப்பு வாக்­குகள் இல்லை.  வாக்­குச்­சீட்டில் கட்­சி­களின் பெயரும் சின்­னமும் இருக்கும்.  சுயேச்­சைக்­கு­ழுக்­களின் இலக்­கங்கள் இருக்கும். 

எனவே தான் விரும்­பு­கின்ற கட்­சிக்கு அல்­லது சுயேச்சைக் குழுக்­க­ளுக்கு மக்கள் வாக்­க­ளிக்க முடியும். அந்த கட்­சியில் அந்த சுயேச்சைக்  குழுவில் போட்­டி­யிட்ட நபர் அதி­க­மான வாக்­கு­களை பெற்றால் அவர் வெற்றி பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் வாக்­க­ளிப்பு முடிந்­ததும் அந்­தந்த வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்­குகள் எண்­ணப்­பட்டு வெற்றி பெற்­றவர் அறி­விக்­கப்­ப­டுவார் என்றும் மேல­திக தேர்தல் ஆணை­யாளர் கேச­ரி­யிடம் சுட்­டிக்­காட்­டினார்.

அவ­ரு­ட­னான செவ்­வியின் முழுமையான விபரம் வரு­மாறு:

கேள்வி: உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்கு ஒரு­வாரம் மாத்­தி­ரமே உள்­ளது. தேர்தல் பணி­கள் எவ்­வாறு உள்­ளன?

பதில்: 339 உள்­ளூ­ராட்­சி­மன்ற அதி­கார சபை­க­ளுக்­காக வாக்­கெ­டுப்பை 2025.05.06ஆம் திக­தி­யன்று நடாத்­து­வ­தற்கு ஆணைக்­குழு தீர்­மா­னித்­தது. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளினால் ஏற்­பட்ட தாம­தத்­துக்கு மத்­தியில் சகல தரப்­பி­ன­ரது அர்ப்­ப­ணிப்­பு­ட­னான செயற்­­பா­டு­க­ளினால் குறித்த திக­தியில் 339 உள்­ளூராட்­சி­மன்ற அதி­கார சபை­க­ளுக்­கான வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான சகல பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

தபால்­மூல வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றாலே தேர்தல் நிறை­வ­டைந்த­தாக கரு­தப்­படும்.  எனவே சகல பணி­களும் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  

கேள்வி: தபால்­மூல வாக்­க­ளிப்­புக்கு தகுதி பெற்­றுள்ள அரச உத்­தி­யோ­கஸ்­தர்­களின் எண்­ணிக்கை மற்றும் வாக்­க­ளிப்பு மத்­திய நிலை­யங்கள் எத்­தனை?

பதில்: இம்­முறை சுமார் 6 இலட்­சத்து 48 ஆயிரம் அரச உத்­தி­யோ­கஸ்­தர்கள் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ளனர். தபால்­மூல வாக்­க­ளிப்பின் போது இம்­முறை விசேட ஏற்­பாடுகள் செய்­யப்­பட்­டுள்ளன. அதா­வது  கண்டி ஸ்ரீ தலதா  வழி­பாட்டு யாத்­தி­ரையில் பாது­காப்பு பணி­­களின் நிமித்தம் கட­மையில் ஈடு­பட்­டுள்ள பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் உட்­பட 8 ஆயிரம் பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­காக கண்டி  மகளிர் உயர் கல்­லூ­ரியில் விசேட வாக்­க­ளிப்பு மத்­திய நிலையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: இம்­முறை வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ள­வர்­களின் மொத்த எண்­ணிக்கை மற்றும் வாக்­க­ளிப்பு மத்­திய நிலை­யங்கள் எத்­தனை?

பதில்: 339 உள்­ளூராட்­சி­மன்ற அதி­கா­ர­ச­பை­க­ளுக்­கான தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பு மற்றும் 3 ஆம் இணைப்பு பட்­டியல் பிர­காரம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­க­மைய இம்­முறை  01 கோடியே 17 இலட்­சத்து 56 ஆயிரம் பேர் வரையில் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ள­னர். வழ­மை­போன்று நாட­ளா­விய ரீதியில் 13,700 வரை­யி­லான வாக்­க­ளிப்பு மத்­திய நிலை­யங்கள் ஊடாக வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்.

கேள்வி: புதிய கலப்பு உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் முறைமை 2017ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. அதற்­க­மைய 2018ஆம் ஆண்டு முத­லா­வது தேர்தல் நடத்­தப்­பட்­டது. இந்த தேர்தல் முறைமை எவ்­வா­றா­னது?  

பதில்: இலங்­கையின் தேர்தல் வர­லாற்று பின்­ன­ணியை நோக்­கு­வோ­மாயின், 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் அதிக பெரும்­பான்­மை­யான வாக்­கு­களை பெறு­ப­வர்­களை தெரிவு செய்யும் முறைமை காணப்­பட்­டது. அதனை தொகு­தி­வாரி முறைமை என்­பார்கள்.

பெரும்­பா­லான நாடு­களில் தொகு­தி­வாரி முறை­மையும், விகி­தா­சார முறை­மையும் காணப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் விகி­தா­சார முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் தொகு­தி­வா­ரி­யான முறைமை மாற்றம் பெற்று, மாவட்ட ரீதி­யாக ஒரு தேர்தல் நடை­பெ­று­கின்ற போது அல்­லது உள்­ளூராட்­சி­மன்ற ரீதி­யாக தேர்தல் நடை­பெ­று­கின்ற போது ஒவ்­வொரு கட்­சி­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களின் வீதத்­துக்கு அமைய உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

2017ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரப்­பட்டு கலப்பு தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதா­வது வட்­டார ரீதி­யாக உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். அதே­வேளை கட்­சி­களும், சுயேச்­சைக் குழுக்­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களின் எண்­ணிக்­கையின் வீதத்­துக்கு அமைய உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவார்கள். வட்­டார முறை­மையின் பிர­காரம் 60 சத­வீ­த­மான உறுப்­பி­னர்­களும், 40 சத­வீ­த­மானோர் விகி­தா­சார முறை­மை­யிலும் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர்.

கேள்வி: உதா­ர­ண­மாக கொழும்பு மாந­கர சபையை ஆராய்­வோ­மாயின், 110 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். இதில் எவ்­வாறு இந்த முறைமை அடிப்­ப­டையில் உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்?

பதில்:  கொழும்பு மாந­கர சபையில் 47 வட்­டா­ரங்கள் உள்­ளன. இந்த வட்­டா­ரங்­களில் இருந்து 66 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். (சில வட்­டா­ரங்­களில் ஒன்­றுக்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­களும் தெரி­வு­ செய்­யப்­ப­டு­வார்கள்.) 44 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார முறை­மையில் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

வாக்­கா­ளர்கள் வட்­டார முறை­மையில் வாக்­க­ளிப்­பார்கள். கட்­சிகள் பெற்­றுக்­கொண்ட வாக்­குகள் மற்றும் சத­வீ­தத்­துக்கு அமை­வாக மதிப்­பீ­டுகள் செய்­யப்­பட்டு விகி­தா­சார ரீதி­யாக உறுப்­பி­னர்கள் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அதற்­கென எம்­மிடம் ஒரு முறை இருக்­கி­றது. அது தொடர்­பாக கட்­சிகள், வேட்­பா­ளர்கள், சுயேச்சை குழுக்­க­ளுக்கு தெளிவு உள்­ளது.

கேள்வி: இந்த தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது?

பதில்: உள்­ளூராட்­சி­மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் போது வாக்­குச்­சீட்டில் சிறிய மாற்­றத்தை அவ­தா­னிக்க முடியும். இங்கு விருப்பு வாக்கு முறைமை என்­ப­தொன்று இல்லை.

ஆகவே வாக்­குச்­சீட்டில் போட்­டி­யிடும் கட்சி­கள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் மாத்­தி­ரமே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். கட்­சி­களின் பெயர்கள் சிங்­கள அக­ர­வ­ரிசை முறை­மையில் காணப்­படும். இதற்கு அருகில் சின்­னங்­களும் அதன் அரு­கில் வாக்­க­ளிக்க இடமும் அளிக்­கப்­பட்­டி­ருக்கும்.

வாக்­குச்­சீட்டில் சுயேச்சைக் குழுக்கள் 'எண்' அடிப்­ப­டையில் காணப்­படும். வாக்­கா­ளர்கள் தாங்கள் விரும்­பு­கின்ற கட்­சிக்கோ அல்­லது சுயேச்சைக் குழு­வுக்கோ வாக்­க­ளிக்க முடியும். ஒரு வாக்­கினை மாத்­திரம் அளிக்க முடியும். வாக்­குச்­சீட்டில் வேட்­பா­ளர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­ப­ட­மாட்­டாது.

வட்­டா­ரத்தில் ஏதேனும் கட்சி அல்­லது சுயேச்சைக் குழு அதி­க­ள­வான வாக்­கு­களை பெற்று வெற்றி பெறு­கி­றதோ, அந்த கட்சி அல்­லது சுயேச்சை குழு சார்பில் குறித்த வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்ட வேட்­பாளர் வெற்­றி­பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார்.

அதன் பின்­னரே விகி­தாசா­ர­ மு­றை­மையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்­றுக்­கொண்ட வாக்கு வீதத்­துக்கு அமைய ஆச­னங்கள் ஒதுக்­கப்­படும்.

கேள்வி: 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் எவ்­வாறு உறுதி செய்­யப்­படும்?

பதில்: இந்த தேர்­தலில் 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் காணப்­பட வேண்டும் என்று சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக கொழும்பு மாந­கர சபையை எடுத்­துக்­கொண்டால் இந்த வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்ட பெண் வேட்­பா­ளர்­களில் எத்­தனை பேர் வெற்றி பெற்­றார்கள் என்­பது கவ­னத்திற்கொள்­ளப்­படும். இவர்­களின் எண்­ணிக்­கையை நீக்கி விட்டு, மிகு­தி­யாக அங்கு எத்­தனை பெண்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­பது தீர்­மா­னிக்­கப்­படும்.

ஒரு கட்சி 3க்கும் குறை­வான உறுப்­பி­னர்­க­ளுடன் வெற்­றி ­பெற்­றி­ருக்­கு­மாயின், அக்­கட்­சி­யிடம் பெண் பிர­தி­நிதித்­துவ ஒதுக்­கீடு குறித்து அறி­வு­றுத்த முடி­யாது என்று சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கூடி­ய­ள­வான உறுப்­பி­னர்­களை பெற்று வெற்றி பெற்ற அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளிடம் பெண் பிர­தி­நி­தித்­துவம் குறித்து ஆணைக்­குழு கட்­டா­ய­மாக அறி­வு­றுத்தும். பெண் பிர­தி­நி­தித்­துவ முறை­மைக்கு பிரத்­தி­யே­க­மான கணிப்­பீட்டு முறைமை உள்­ளது.

கேள்வி: தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் எப்­படி ஆட்­சி­ய­மைக்­கப்­படும்?

பதில்: உள்­ளூ­ராட்­சி­மன்­றத்தில் 50 வீதத்­துக்கும் மேலான உறுப்­பி­னர்கள் வெற்றி பெறு­கின்ற கட்சி அல்­லது சுயேச்சைக் குழு­வுக்கு தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்தல் விடுக்கும். அதா­வது சபையின் முதல்வர் மற்றும் துணை முதல்­வரை நிய­மிக்­கு­மாறு அறி­விப்போம்.

அந்தக் கட்சி அல்­லது சுயேச்சைக் குழுவின் கீழ் அந்த ஆட்சி நடை­பெறும். இங்கு முக்­கி­ய­மான விடயம் ஒன்றைப் பார்க்க வேண்டும். மாந­கர சபை என்றால் முதல்வர், துணை முதல்வர். நகர சபை­யாக இருந்தால், தலைவர் உப­த­லைவர். பிர­தேச சபை­யாக இருந்தால் தவி­சாளர், உப தவி­சாளர். இந்த நிய­ம­னங்­களை செய்து எங்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறு இக்­கட்­சியின் செய­லா­ள­ருக்கு அறி­விப்போம்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்க்­கட்சி என்று ஒன்று இல்லை. தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அர­சியல் இருக்க முடி­யாது என்­ப­துதான் எண்­ணக்­கரு.

எனவே அங்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி அங்கு இருக்­காது. சகல உறுப்­பி­னர்­களும் சம­மாக ஒன்­றி­ணைந்து அந்த உள்­ளூ­ராட்சி சபையை நடத்­து­வார்கள். இங்கு எந்­த­வொரு கட்­சியோ அல்­லது சுயேட்சைக் குழுவோ 50 வீத உறுப்­பி­னர்­களைப் பெற்றுக்கொள்ளாவிடின் அது தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு அப்­பாற்­பட்­ட­தாக மாறி விடும். அப்­போது உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர் ஒரு குறித்த தினத்தில் சகல கட்­சி­க­ளையும் அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி அங்கே தலை­வ­ரையும் உப­த­லை­வ­ரையும் தெரிவு செய்வார்.

கேள்வி: ஒரு­வேளை பல கட்­சிகள் இணைந்து அல்­லது சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சி அமைக்க முடி­யுமா?

பதில்: ஏதா­வது ஒரு கட்சி அல்­லது ஒரு சுயேச்சைக் குழு 50 வீதத்­துக்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைப் பெற்றால் மட்­டுமே அங்கு தேர்தல் ஆணைக்­குழு தலை­யிடும். அதனை ஏற்றுக்கொள்வோம். அவ்­வாறு இல்­லாத சந்­தர்ப்­பத்தில் அது உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ருக்கு போய் விடும்.

கேள்வி: தேர்தல் ஆணைக்­குழு என்ற வகையில் வாக்­கா­ளர்­க­ளுக்கு உங்கள் செய்தி என்ன?

பதில்: கெள­ர­வ­மான அர­சியல் கலா­சாரம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­கள் வன்­மு­றை­யின்றி இலங்­கைக்கு நற்­பெயரை தேடிக்கொடுக்கும் வகையில் இடம்­பெற்­றன.

அதே­போன்று இந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலும் கெர­ள­வ­மா­கவும் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் நடை­பெறும் என்று எதிர்­பார்க்­கிறோம். இங்கு இரண்டு விட­யங்­களை முக்­கி­ய­மாக பார்க்­கிறோம். முத­லா­வ­தாக கட்­டா­ய­மாக வாக்­கா­ளர்கள் வாக்­களிக்கவேண்டும். இந்தத் தேர்­தலில் மக்­க­ளுக்கு ஆர்வம் இல்­லாமல் இருப்­ப­தாக ஊட­கங்­களில் பார்க்­கிறோம்.

அப்­ப­டி­யில்லை. நான், கிரா­மத்தின் ஒரு வேலை நடக்­க­வில்லை என்று கூறு­வ­தற்கு முன்­ப­தாக வாக்­க­ளித்­தி­ருக்க வேண்டும். வாக்­க­ளித்து சரி­யான பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­யாமல் எனக்கு சேவை கிடைக்­க­வில்லை என்று நான் எப்­படி குறை கூற முடியும்? அந்தத் தார்­மீகப் பொறுப்பு எனக்கு இல்லை.

காரணம் நான் வாக்­க­ளிக்­க­வில்லை. நான் வாக்­க­ளித்து விட்டே கேள்வி கேட்க வேண்டும். கட்­டா­ய­மாக வாக்­குச்­சா­வ­டிக்குச் சென்று வாக்­க­ளி­யுங்கள் என்று வாக்­கா­ளர்­களை தேர்தல் ஆணைக்­குழு விந­ய­மாகக் கோரு­கின்­றது.

வாக்­க­ளிக்கும் போது உங்கள் உங்கள் பகு­தி­களில் சரி­யாக சேவை­யாற்­று­கின்­ற­வர்கள், நடை­மு­றை­களைப் பின்­பற்­று­கின்­ற­வர்கள், கெள­ர­வ­மான, கண்ணி­ய­மான சட்­டத்தை மதித்து செயற்­ப­டு­கின்­ற­வர்­களை தெரிவு செய்­யுங்கள். அதன்­மூ­ல­மாக கெள­ர­வ­மான உள்­ளூ­ராட்சி மன்­றத்­தையும் அர­சியல் கலா­சா­ரத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்கு மக்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். இதையே வாக்­கா­ளர்­க­ளிடம் ஆணைக்­குழு கோரு­கி­றது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் என்­பவை ஜன­நா­ய­கத்தின் முன்­பள்ளி என்று கூறப்­ப­டு­கி­றது. இங்கு முத­லா­வ­தாக தெரிவு செய்­யப்­ப­டு­கி­ற­வர்கள் பின்னர் மாகாண சபை, பாரா­ளு­மன்ற சபை என்று பிர­வே­சிப்­பார்கள். எனவே அவர்கள் படிப்­ப­டி­யாக வளர்ந்து செல்­வ­தற்கு மக்கள் உறு­து­ணை­யாக இருக்க வேண்டும்.

கேள்வி: மக்களின் ஆர்வம் தேர்­தலில் எப்படி இருக்கிறது?

பதில்: இது­போன்ற விட­யங்கள் சில ஊட­கங்­களில் வரு­வ­தையும் காண்­கிறோம். ஆனால், மக்­க­ளுக்கு வாக்­க­ளிப்பில் பாரிய ஆர்வம் இருக்­கி­றது. மக்கள் தமது உள்ளூர் பிர­தே­சங்­களை ஆளு­வ­தற்கு பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­ய­வுள்­ளார்கள். அதில் அவர்கள் ஆர்­வ­மாக செயற்­ப­டு­வார்கள் என்று நாம் நம்­பு­கிறோம்.

கேள்வி: அர­சி­யல்­வா­தி­க­ளிடம் உங்கள் கோரிக்கை என்ன?

பதில்: அர­சி­யல் ­கட்­சிகள், ஆத­ரவா­ளர்கள், வேட்­பா­ளர்கள் ஆகி­யோ­ரிடம் சட்­டத்தை மதித்து செயற்­ப­டு­மாறு கோரிக்கை விடுக்கி­றோம். சட்ட திட்­டங்கள் விதி­மு­றைகள் காணப்­­ப­டு­கின்­றன. எனவே அமை­தி­யான சுதந்­தி­ர­மான நீதி­யான தேர்­தலை நடத்த ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

கேள்வி: 06ஆம் திகதி காலை வாக்­க­ளிக்க செல்­கின்­ற­வர்கள் எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்?

பதில்: உங்­க­ளுக்கு தபாலில் வந்து சேரு­கின்ற வாக்­காளர் அட்­டை­களை எடுத்துச் செல்­லுங்கள். உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்டை விநி­யோகம் தற்­போது இடம்­பெ­று­கி­றது. அது கிடைக்­கா­த­வர்கள் அருகில் இருக்­கின்ற தபால் நிலை­யத்­துக்கு சென்று உங்­க­ளது பெயரை உறு­திப்­ப­டுத்தி வாக்­காளர் அட்­டையைப் பெற்றுக் கொள்­ளலாம். அது கட்­டாயம் எடுத்­துச் செல்ல வேண்டும் என்று கூறப்­ப­ட­வில்லை. ஆனால் அது எடுத்துச் செல்­வது வாக்­க­ளிப்­ப­தற்கு இல­குவான நிலையில் ஏற்­ப­டு­த்திக்கொடுக்கும். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இணை­யத்­த­ளத்தில்கூட வாக்­காளர் அட்­டையைப் பெற முடியும்.

கேள்வி: எந்­தெந்த அடை­யாள அட்­டை­களை கொண்டு செல்ல வேண்டும்?

பதில்: அடை­யாள அட்­டை­யின்றி யாருக்­கும் வாக்­களிக்க மு­டி­யாது. தேசிய அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்லு­­­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம், ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, மதத் தலை­வர்­க­ளுக்­கான அடை­யாள அட்டை, முதியோர் அடை­யாள அட்டை என்­ப­னவற்றைக் கொண்டு செல்­ல­லாம்.

இவற்­றுக்கு மேல­தி­க­­மாக வலிமை இழப்­புக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு தேர்தல் ஆணைக்­குழு அடை­யாள அட்டை வழங்கும். அத­னையும் கொண்டு செல்­லலாம். அத்­துடன் இவை எதுவும் இல்­லா­த­வர்கள் உட­­ன­டி­யாக உங்கள் கிராம உத்­தி­யோ­கத்­தரை நாடி தேர்தல் ஆணைக்­கு­ழு வழங்­கு­கின்ற தற்­கா­லிக அடை­யாள அட்­டையை பெற்றுக்கொள்­ளுங்கள்.

வலது குறைந்த பிர­ஜை­க­ளுக்கு ஆட்­ப­திவுத் திணைக்­களம் அடை­யாள அட்­டைக்கு பதி­லாக ஒரு A4 தாளில் படத்தை உறு­திப்­ப­டுத்தி ஆவணம் ஒன்றை வழங்­கு­கின்­றது. அத­னையும் எடுத்துச் செல்லலாம். மேலும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கிடைக்கும் முன்­ப­தாக தற்­கா­லிகமாக ஒரு தாளில் சான்­று­ப­டுத்­தப்­பட்டு வழங்கப்படும் அதனையும் பயன்படுத்தலாம்.  

கேள்வி: வாக்காளர்களுக்கு சகல ஒத்­துழைப்பையும் வழங்குவதற்கு தேர்­தல் ஆணைக்குழு தயாராக இருக்­கிறதா?

பதில்: நாங்கள் தற்போதே செயற்பட்­டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

கேள்வி: தேர்தல் கண்காணிப்புக்­கள் எப்படி நடைபெறும்?

பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வர மாட்­டார்கள். உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடு­படுவார்கள். இதில் பெவ்ரல், கபே, சி.எம்.இ.வி. உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்­பட்டுள்­ளது. அவர்கள் வாக்­­களிப்பு நிலையங்களிலும் வாக்காளர் நிலை­யங்களிலும் கண்காணிப்பு செய்­வார்­கள். ஒவ­்வொரு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு வகையறாக்களின் கீழ் அனுமதி வழங்­கப்­பட்டுள்ளது.

கேள்வி: வாக்கு எண்ணும் பணிகள் எப்படி நடைபெறும்?

பதில்: ஏனைய தேர்தல்களில் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முடிந்ததும் வாக்­­­குச் சீட்டுகள் வாக்கு எண்ணும் நிலை­யத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்தத் தேர்தலில் குறித்து வட்டாரத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்கு­கள் எண்ணப்படும்.

ஒரு வட்டாரத்துக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் மட்டும் இருந்தால் அங்கு வாக்குகள் எண்ணப்படும். ஒரு வட்­­டா­ரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்­க­ளிப்பு நிலையங்கள் இருந்தால் ஒரு இடத்­துக்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்­ணப்­படும். அங்கேயே வெற்றி பெற்ற­வர்கள் யார் என்பதை அறிவிப்போம்.

அதன் பின்னர் விகிதாசார உறுப்பினர்கள் தெரிவுகள் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும். அதாவது வட்டாரங்களில் வாக்களிப்பு செய்­யப்பட்ட பதி­­யப்பட்ட படிவங்கள் மாவட்­டத்துக்கு கொண்டு­­வரப்பட்டு இந்த செயற்­பாடுகள் முன்னெடுக்கப்படும்.  

கேள்வி: தேர்தலின் முடிவுகள் எப்படி வரும்?

பதில்: தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடிய ஒரே ஒரு அதிகாரம் பெற்ற நிறுவனம் தேர்தல் ஆணைக்குழுதான். அதன் அறி­விப்பே இறுதியானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வெற்றி விரிவுபடுத்தப்பட...

2025-07-10 12:35:15
news-image

மண் மக்களிற்கான நீதிக்கா பேசும்போது செம்மணியிடமிருந்து...

2025-07-10 11:23:49
news-image

காதலர்களால் ஆக்கிரமிக்கப்படும் கோட்டை ரேம்பர்ட் வெட்லாண்ட்...

2025-07-09 13:36:46
news-image

தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் 

2025-07-08 18:52:04
news-image

எங்கள் கணவர்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது...

2025-07-09 14:51:53
news-image

இலங்கையில் இணைய குற்ற வலையமைப்புகளின் அச்சமூட்டும்...

2025-07-07 15:49:57
news-image

' அவைகள் தோல்களும் எலும்புகளும்"காசாவில் பால்மா...

2025-07-07 12:16:34
news-image

மக்கள் தொடர்பு அறுந்த அரசியல்வாதிகளின் விதி

2025-07-06 16:59:37
news-image

உலக முஸ்லிம்களின் கண்ணியத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள...

2025-07-06 16:58:36
news-image

தலாய் லாமா: அரசியல் சூறாவளிக்குள் ஓர்...

2025-07-06 16:35:41
news-image

சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள்

2025-07-06 16:32:35
news-image

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அர்த்தமுள்ள கொள்கைகள்...

2025-07-06 16:27:50