புதுமுக நடிகர் ஜீவா முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'ட்ரீம் கேர்ள்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'ஒளிப்பதிவு மேதை' பி. சி. ஸ்ரீராம் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் எம். ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ' ட்ரீம் கேர்ள் ' எனும் திரைப்படத்தில் புதுமுக கலைஞர்கள் ஜீவா, ஹரிஷா , பிரபு சாஸ்தா, இந்திரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இளமாறன் இசையமைத்துள்ளார். சாருலதா பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் 'ஒளிப்பதிவு மேதை' பி. சி. ஸ்ரீராம், இயக்குநர்கள் வசந்த பாலன்- அஜயன் பாலா -பிருந்தா சாரதி- நந்தா பெரியசாமி -கதிர் - உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் எம். ஆர் .பாரதி பேசுகையில், '' ஒவ்வொரு மனிதருக்குள் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை பேசுவது தான் இந்தப் படம்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM