இன்றைய திகதியில் எம்மில் பலரும் அலுவலகமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் உட்காருவதற்கான நிமிர்ந்து உட்காருவதற்கான அல்லது பணியாற்றுவதற்கான பிரத்யேக முறையில் உட்காந்து பணியாற்றாமல் தங்களுடைய சௌகரியத்திற்கு ஏற்றவாறு அமர்ந்து பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பின்பக்க முதுகு வலி, கீழ் பக்க முதுகு வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய இடுப்பு முதுகெலும்பின் கடைசி பகுதியில் முக்கோண வடிவத்தில் எலும்புகள் அமைய பெற்றுள்ளன. இந்த இணைப்பில் ஏதேனும் எலும்புகள் கூடுதலாக வளர்ச்சி அடைந்தாலோ அல்லது இந்த இணைப்புகள் அசாதாரணமாக இருந்தாலோ அப்பகுதியில் வலியையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும். இதனை மருத்துவ மொழியில் பெர்டிலோலொட்டி சிண்ட்ரோம் என் குறிப்பிடுவார்கள்.
கீழ்ப்பக்க முதுகு வலி குறிப்பாக ஒரு பகுதியில் மட்டும் அதீத வலி, இடுப்பு மற்றும் ஏனைய பகுதிகளில் வலி பரவுவது ,கீழ்ப் பக்க முதுகு பகுதியில் விறைப்பு தன்மை இருப்பது போல் உணர்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
அவர்கள் இந்த தருணத்தில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்துகள் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள்.
இதன் பிறகு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் நாகேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM