உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்

26 Apr, 2025 | 02:37 PM
image

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விசேட விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவையில்  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு சம்பள இழப்பற்ற விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்தருநர்கள் தங்களது ஊழியர்களுக்கு வாக்களிக்க செல்ல அனுமதி வழங்குவதில்லை என கடந்த கால தேர்தல்களின் போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் தூரம் மற்றும் நேரத்தை அடிப்படையாக கொண்டு விடுமுறை வழங்குதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31