எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விசேட விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு சம்பள இழப்பற்ற விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்தருநர்கள் தங்களது ஊழியர்களுக்கு வாக்களிக்க செல்ல அனுமதி வழங்குவதில்லை என கடந்த கால தேர்தல்களின் போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் தூரம் மற்றும் நேரத்தை அடிப்படையாக கொண்டு விடுமுறை வழங்குதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM