கண்டி தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்தத்தை தரிசிக்க வருகை தந்த மக்களுக்கு கண்டி மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய வெலஸ் மெண்டிஸ் ஆண்டகையின் வழிநடத்தலின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடி நீர், பழச்சாறுகள் சனிக்கிழமை (26) விநியோகிக்கப்பட்டன.
கண்டி செட்டிக் இயக்குநர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் மறை மாவட்ட குருமார்கள், அருட்சகோதரர்கள், மற்றும் அருட்சகோதரிகள், செட்டிக் நிறுவன பணியாளர்கள் அனைவரும் உலர்உணவுகளை விநியோகித்தனர்.
இது குறித்து கண்டி செட்டிக் நிறுவன வேலைத்திட்ட பணியாளர் அருள்நேசராஜ் கூறுகையில்,
சர்வமத செயற்பாடுகளை கடந்த பல ஆண்டுகளாக செட்டிக் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
மேலும், நாம் மத நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டிராமல் அதை செயற்பாட்டு ரீதியாக மக்கள் மத்தியில் களப் பணியாக முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில் புனித தந்தத்தை தரிசிக்க வந்து இரவு பகல் பாராது கால் கடுக்க இங்கு காத்திருக்கும் பெளத்த மக்களின் நம்பிக்கைகளை நாம் என்றும் மதிக்கின்றோம்.
இப்பணியை முன்னெடுக்க எம்மை வழிநடத்தியது மாத்திரமல்லாது மத நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருக்கக் கூடிய எமது மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய வெலஸ் மெண்டிஸ் ஆண்டகை அவர்களுக்கு இத்தருணத்தில் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM