கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு மற்றும் நிகழ்நேர பாதுகாப்பு பற்றிய புதுப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
• உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து சம்பவம் குறித்து உடனடி விசாரணையை மேற்கொள்ளல்; விரிவான தடயவியல் விசாரணையை மேற்கொள்ளல்; பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல்; மற்றும் எதிர்கால சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தல்.
•குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றவியல் பிரிவுக்கு சம்பவம் குறித்து புகாரளித்தல் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல்.
•மேலதிக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவாதற்காக வலையமைப்பின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
•முக்கியமான வங்கித் தொகுதிகள் அல்லது வாடிக்கையாளர் கணக்குகளுக்கு எந்த ஊறும் விளையாத வகையில் அனைத்து வங்கி வழித்தொடர்புகளிலும் தஙகுதடையற்ற செயற்பாடுகளைப் பேணுதல்
•கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் (CSE) ஊடாக, எமது அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் (Facebook kw;Wk; LinkedIn) மூலம் பகிரங்க வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
•வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர் தொடர்பான தகவல்களைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.
•வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு அறிவித்தல்; மற்றும் நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தல்.
வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர் தகவல்களைப் பாதுகாத்தல்
நாம் தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். ஏதேனும் வாடிக்கையாளர் அல்லது பங்குதாரரின் பருண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக இனங்காணப்பட்டால், தேவைப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் நாம் அவர்களை நேரடியாக தொடர்புகொள்வோம்.
இச் சம்பவத்தின் விளைவாக வாடிக்கையாளர்களுக்கோ, வங்கிக்கோ அல்லது நிதிப் பரிவர்த்தனைகளுக்கோ எந்த விதமான நிதி சார் அபாயமும் இல்லை என உத்தரவாதம் அளிக்க விரும்புகிறோம். வங்கி நடவடிக்கைகளைச் செயன்முறைக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பான தொகுதிகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் பாதிப்பின்றியும் உள்ளன. சைபர் பாதுகாப்பு நிபுணர்களது ஆதரவுடன் வங்கியின் பாதுகாப்பு சூழலை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கசியவிடப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாகப் பகிர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றத் தடை உத்தரவை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகளையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்கு கிடைக்கும் எந்தவொரு வாடிக்கையாளர் தகவலையும் பகிர வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறோம், ஏனெனில் இது கசிந்த தகவலுடன் தொடர்புடையவர்களை பாதிக்க மட்டுமே செய்யும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM