துணிச்சல் மிகுந்த விலங்குகளில் ஒன்று தான், ஆங்கிலத்தில் ‘ஹைனா’ (Hyena) எனப்படும் கழுதைப்புலி. இது, தோற்றத்தில் நாயைப் போலவும் நரியைப் போலவும் காணப்படும் வினோதமான ஒரு விலங்காகும்.
கழுதைப்புலிகள், ஆசியா மற்றும் ஐரோப்பா என இரு கண்டங்களும் இணைந்த பெருநிலப்பகுதியில், அடர்ந்த காடுகளில் இருபத்தி இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நாய் போன்ற ஒரு மூதாதையரிடமிருந்து தோன்றிய ஒரு உயிரினம் என்று கருதப்படுகிறது. இவற்கும், கழுதை மற்றும் புலி ஆகிவற்றுக்கும் இடையில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
கூட்டமாக இருந்தால் ஒரு சிங்கத்தையே கொல்லும் அளவிற்கு பலம்வாய்ந்த விலங்கான இவை, பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் நடத்தையில் நாய் குடும்பத்தை ஒத்திருக்கின்றன.
அணைத்துண்ணி விலங்கான கழுதைப்புலிகள், தங்கள் நகங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் கூர்மையான பற்களைப் பயன்படுத்தி தமது உணவை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் படைத்தவை. வேட்டையாடிய உணவை உண்பதோடு மட்டுமின்றி, அவற்றை சேமித்து வைத்தும் பயன்படுத்துகின்றன.
கழுதைப்புலிகள், ஒருவகையான வினோதமான ஒலியெழுப்பி தங்கள் குழுவினருக்கு செய்திகளை பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இவற்றின் குரல் சுமார் ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கரமாக எதிரொலிப்பதால் இவற்றின் குரலைக் கேட்பவருக்கு அச்சத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.
ஒவ்வொரு கழுதைப் புலிகளுக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு கழுதைப் புலிகளுக்குமே வித்தியாசமான ஊளை சத்தம் இருக்கும். ஒரு கழுதைப் புலிகளுக்கு இருக்கும் அந்த சத்தம், மற்ற கழுதைப் புலிகளுக்கு இருக்காது. இந்த சத்தத்தை வைத்து கழுதைப் புலிகள் தங்கள் கூட்டாளிகளை அடையாளம் கண்டு கொள்ளும்.
கழுதைப்புலிகளின் பலமே அவை சேர்ந்து இருப்பதுதான். தனித்தனியாக இருப்பது போலவே தோன்றும். ஆனால், இரை சிக்கிவிட்டால் ஒருவித ஓசையை வெளிப்படுத்தி மொத்த குழுவையும் வரவழைத்துவிடும்.
அதேசமயம், வேட்டையாடுகிற எல்லா தகுதிகளும் இவற்றுக்கு இருந்தாலும், அவ்வளவு எளிதில் இவை வேட்டையாடுவதில்லை. சிங்கமோ சிறுத்தையோ ஒரு இரையை வேட்டையாடும் வரை கழுதைப்புலிகள் காத்திருக்கும். சிங்கம் இரையை வேட்டையாடி வீழ்த்திவிட்டால் மொத்த கழுதைப்புலிகளின் கூட்டமும் சிங்கத்தை சூழ்ந்து வெறுப்பேற்றும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடிய இரையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்.
ஆண் கழுதைப்புலிகளுக்கும் பெண் கழுதைப்புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் உறுப்பு பெண் கழுதைப்புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் உறுப்பு என்று பெயர். உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண் உறுப்பு, ஹோர்மோன் கோளாறால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் உறுப்பு வாயிலாகத்தான் பிரசவிக்க முடியும்.
கழுதைப்புலியின் 23 இன்ச் அளவுக்கு விரிவடைகின்ற போலியான ஆணுறுப்பில் 2 கிலோ எடை கொண்ட குட்டியை பிரசவிப்பது நினைத்துப் பார்க்க முடியாத துயரம். பிரசவத்தின் போது, இரண்டு பேரில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப்புலிகளில் 15% இறந்துவிடுகின்றன. சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழும். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன.
இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டிகள் ஈன்ற நாளிலிருந்து நான்கு வாரங்கள் வரை அவை மண்ணுக்குள் வளை தோண்டி வசிக்கின்றன. வேறு யாரையும் அங்கு அவை அனுமதிப்பதில்லை.
கழுதை புலிகள் குழுவில் புதிதாகப் பிறந்த குட்டியின் வாசனையை வைத்து மற்ற கழுதைப்புலிகள் குட்டிகளைக் குழுவில் சேர்த்துக் கொள்கின்றன.
தாயிடம் பால் குடித்து வளர்கிற குட்டிகள் வளைகளில் பாதுகாப்பாக இருக்கும். நான்கு குட்டிகளில் யார் முதலில் பால் அருந்துவது என்கிற சண்டை குட்டிகளுக்குள் நடக்கும். இதில் பலம் பொருந்திய பெண் குட்டிகள் ஆண் குட்டிகளுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றுவிடுகின்றன.
சில நேரங்களில் சண்டையின் முடிவில் ஆண் குட்டிகளைப் பெண் குட்டிகள் கொன்றுவிடுகின்றன. தன்னுடைய இனத்துக்குள் `சண்டை செய்து’ தப்பிப் பிழைக்கிற ஆண் குட்டிகள் மிக சிலவே. ஆண் குட்டிகள் வலிமை மிகுந்த பெண் குட்டிகளோடு சண்டையிட்டு வெல்ல வேண்டும்.
இனி அவை வேட்டையாட தயாராக வேண்டும். இங்கும் ஆண் குட்டிகளின் நிலை பரிதாபம்தான். இரைக்காக மற்ற பெண் குட்டிகளுடன் போராட வேண்டிவரும். எல்லாவற்றிலும் இருந்து தப்பிப் பிழைக்கும் ஆண் குட்டிகள், பருவம் அடைகிற வரை தாயுடன் இருக்கின்றன. பருவம் வந்ததும் ஆண் குட்டிகள் குழுவிலிருந்து பிரிந்து செல்கிற ஆண் கழுதைப்புலிகள் வேறு ஒரு கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றன.
அதிலும் ஆண் கழுதைப்புலிகளுக்கு சிக்கல்தான். இன்னொரு குழுவில் நினைத்தவுடன் இணைந்துகொள்ள இயலாது, அதற்கும் ஆண் கழுதைப்புலிகள் சண்டை செய்தாக வேண்டும். மற்ற குழுவில் உள்ள கழுதைப்புலிகளை அவ்வளவு எளிதில் இன்னொரு குழுவில் எந்தக் கழுதைப்புலிகளும் ஏற்றுக்கொள்ளாது. சண்டை செய்துதான் அவற்றோடு சேர வேண்டும்.
கழுதைப் புலிகள் மட்டும் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் கண்ணியமான மிருகங்கள். அது மட்டுமல்ல. மனிதர்களை போல ஒரே குடும்பத்தில் உள்ள பெண் கழுதைப் புலிகளிடம் ஆண் கழுதைப் புலிகள் இணை சேராது. வேறு குடும்பத்தில் உள்ள பெண்களையே ஆண் கழுதைப் புலிகள் தங்கள் துணையாக தேர்ந்தெடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM