நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, கல்லீரலின் நலன் மிகவும் முக்கியமாகும். காரணம், நம் உடலினுள் இருக்கும் இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற திட உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். மிக அதிகமான பணிகளைச் செய்வதும் இது தான். கிட்டத்தட்ட 500-க்கும் அதிகமான வேலைகள் கல்லீரலால் நடக்கின்றன.
குறிப்பாக, நம் இரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்றி (Detoxification) சுத்திகரிக்கும் பணியை கல்லீரலே செய்கிறது. ‘அல்புமின்’ போன்ற சில முக்கியமான புரதங்களின் உற்பத்தியும், செரிமான சக்திக்கான பித்தநீரின் உற்பத்தியும், எதிர்ப்பு சக்தியைத் தரும் ‘இம்யூனோகுளோபுலின்’ போன்ற புரத உற்பத்தியும் கல்லீரலிலேயே நடக்கிறது.
மேலும், இரத்தம் உறைவதற்குத் தேவையான சில மூலப்பொருட்களும் கல்லீரலாலேயே உற்பத்தியாகின்றன. இதுபோன்ற முக்கியமான பணிகளுடன் உடலில் சீனியின் அளவைப் பராமரிப்பது போன்ற சிறு உதவிகளையும் கல்லீரல் செய்கிறது. அத்தகைய கல்லீரலின் ஆரோக்கியம் என்பது எமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாகும்.
கல்லீரலின் முக்கிய பணிகள்
- இரத்த அணுக்கள், நோயெதிர்ப்பு புரதங்கள், ஹோர்மோன்கள், நொதிகள், செரிமானத்துக்கான பித்த நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
- இரத்தம் உறைவதற்குத் தேவையான சில மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
- நாம் சாப்பிடும் உணவில் இருக்கிற மாச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மூன்றையும் அரைக்க உதவும். அரைத்ததன் மூலம் கிடைக்கிற சத்துக்களை உடல் உறுப்புகளுக்கு தேவையானபோது வழங்கும்.
- சிறுநீரகங்களுடன் சேர்ந்து நம் உடலில் இருக்கிற நச்சுக்களை வெளியேற்றும்.
- உடலுக்கு தேவையான வேதியியல் மாற்றங்களையும் உற்பத்தி செய்யும்.
கல்லீரல் பிரச்சினையை தடுக்கும் வழிகள்
- இஞ்சி, பூண்டு, கிராம்பு, மஞ்சள், வோல்நட் ஆகியவற்றை உலர்த்தி தனித்தனியாக தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் எல்லாவற்றிலும் சேர்த்து இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், இயற்கையாகவே நம்முடைய உடலில் ஆன்டி-ஒக்சிடென்ட் அதிகரித்து நோய் எதிர்ப்பு தன்மை கூடுதலாகும். இதனால் கல்லீரல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
- ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் காரணமாக கல்லீரலில் வரக்கூடிய தொற்றுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், ஆன்டி வைரல் மருந்துகள் (Anti viral medications) மூலம் கல்லீரலை காப்பாற்றி விடலாம்.
- மதுப்பழக்கத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
- தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. நமக்கு தேவையான கலோரியின் அளவை காட்டிலும் நாம் அதிக உணவை உட்கொள்ளும்போது அது கொழுப்பாக கல்லீரலில் சேர்கிறது.
- நமக்கு தேவையான கலோரியை பொருத்து உணவை உட்கொள்ளப் பழகிக் கொண்டால் கல்லீரலில் கொழுப்பு சேராது.
- இனிப்புகள், உருளைக் கிழங்கு, குளிர்பானங்கள், மூன்று வேளை அரிசி என அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பருப்புகள், பயறு, கடலை, தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீன், முட்டை வெள்ளைக் கரு, பால் என புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு, கார்போஹைட் ரேட் உணவை குறைக்க வேண்டும்.
- அதேபோல நடைபயிற்சி மிக அவசியம். ஏனென்றால், நமது உடலுக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பது நமக்கு தெரியாது. எனவே தேவையில்லாத கலோரிகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும் போதும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM