மொனராகலை - மாத்தறை வீதியில் விபத்து ; பெண் பலி ; மேலும் இரு பெண்கள் படுகாயம்!

26 Apr, 2025 | 12:48 PM
image

மொனராகலை  - மாத்தறை வீதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியோரத்தில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் கடை ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஆவார். 

காயமடைந்த இரண்டு பெண்ளும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் லுனுகம்வெஹெர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42
news-image

கெஹலியவின் மகன் கைது !

2025-05-21 15:16:07
news-image

சர்வதேச தேயிலை தினத்தில் நுவரெலியாவில் உரிமைகோரி...

2025-05-21 14:49:08
news-image

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்...

2025-05-21 14:10:24
news-image

கிழக்கு மாகாண வைத்தியதுறையின் வரலாற்று சாதனை...

2025-05-21 16:14:53