வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

26 Apr, 2025 | 09:49 AM
image

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் மின்னல் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.

அரலகங்வில,கெகுலுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய  வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31
news-image

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம்...

2025-05-15 20:55:19
news-image

அமோனியா உர மூடைகள் மோசடி :...

2025-05-15 20:54:07