இந்திய - இலங்கை ஊடகவியலாளர் நட்புறவு அமைப்பு (SLIMFA) ஏற்பாடு செய்த முதல் ஊடக விழா வெள்ளிக்கிழமை (25) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே மற்றும் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘புதிய ஊடக சூழலை ஒன்றாக வழிநடத்துதல்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இவ்விழா, இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் முக்கிய அம்சங்களாக ஊடகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI in journalism), மொபைல் ஊடகவியல், ஊடகவியலில் வருமானமீட்டல், தரவுத் தகவல் ஊடகவியல், தவறான தகவல்களின் பரவலை தடுக்கும் முறைகள், கதைக்கான உள்ளடக்கம் உருவாக்குதல் மற்றும் பொட்காஸ்ட் ஆகியவை அடங்கும்.
முறையாக நடைபெறும் இவ்விழாவில் பிரதான உரைகள், குழுவுரையாடல்கள், பிரிக்கபட்ட அமர்வுகள் மற்றும் பரஸ்பர உரையாடல்களுக்கான சந்தர்ப்பம் இடம்பெறும்.
இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த ஊடக நிபுணர்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் தளமாகவும், தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைகிறது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த Firstpost பத்திரிகையின் முகாமைத்துவ ஆசிரியர் பால்கி சர்மா, WION ஊடகத்தின் வெளிநாட்டு விவகார உதவி ஆசிரியர் சித்தாந்த் சிபால், இந்தியா டுடே குழுமத்தின் முதன்மை ஒத்துழைப்பு அலுவலர் ஷைலேஷ் ஷேகர் மற்றும் TAM ஊடக ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி எல்.வி. கிருஷ்ணன் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த ஊடக நிபுணர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
2024 மே மாதம் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய - இலங்கை ஊடகவியலாளர் நட்புறவு அமைப்பு (SLIMFA), இருநாடுகளுக்கிடையிலான ஊடகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு கலந்துரையாடல்கள், வட்ட மேசை மாநாடுகளை நடத்தியுள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான நாகரிக இணைப்புகளைக் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM