(நெவில் அன்தனி)
டயலொக் (இலங்கை) பாடசாலைகள் றக்பி வரலாற்றில் முதல் தடவையாக 19 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிகளுக்கு முன்னதாக ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதற்கு அமைய இந்த வருடம் டயலொக் பாடசாலைகள் றக்பியில் முதலாம் பிரிவு ஏ அடுக்கு அணிகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (25) ஆரம்பமாகிறது.
'லீக் சுற்று முடிவில் பல பாடசாலைகள் தங்களது வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவித்து நொக் அவுட் போட்டியில் பங்குபற்ற முன்வர மறுக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டும் ஏ அடுக்கில் பங்குபற்றும் 16 அணிகளையும் நொக் அவுட் போட்டியில் விளையாடச் செய்வதை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் போட்டிகளை முதலில் நடத்தத் தீர்மானித்தோம்' என இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத் தலைவர் கமல் ஆரியசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குநரும் பல்வேறு விளையாட்டுக்களுக்கு அனுசரணை வழங்கிவருவதுமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இந்த வருடத்துக்கான 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான றக்பி லீக் மற்றும் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட், பிரதமர் கிண்ண நொக் அவுட், சங்கத் தலைவர் கிண்ண நொக் அவுட் றக்பி ஆகியவற்றுக்கு பிரதான அனுசரணை வழங்குகிறது. டயலொக் தொலைக்காட்சிகளில் போட்டிகள் யாவும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இப் போட்டிகள் தொடர்பாக தெளிபடுத்தும் ஊடக சந்திப்புடன் அனுசரணை வழங்கும் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
'எதிர்கால சம்பியன்களை உருவாக்குவதில் எமது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு அமைய பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானதும் இரசிகர்களைப் பெரிதும் கவர்வதுமான பாடசாலைகள் றக்பி போட்டிக்கு அனுசரணை வழங்குவதில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பெருமை கொள்கிறது. மேலும் இலங்கை கனிஷ்ட மற்றும் தேசிய றக்பி அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் களமாக விளங்கும் பாடசாலைகள் றக்பிக்கு என்றென்றும் ஒத்துழைப்பு வழங்க டயலொக ஆசிஆட்டா பிஎல்சி தயாராக இருக்கிறது'' என இந்த வைபவத்தில் பேசிய அதன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெரும தெரிவித்தார்.
அத்துடன் டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் மற்றும் நொக் அவுட் போட்டிகளுக்கான அனுசரணை உதவுத் தொகைக்கான மாதிரி ஆவணத்தை இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத் தலைவர் கமல் ஆரியசிங்கவிடம் லசன்த தேவரப்பெரும வழங்கினார். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக மற்றும் ஊடக உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்கவும் பிரசன்னமாகிருந்தார்.
இந்த வருடம் முதலாம் பிரிவு ஏ அடுக்குக்கான டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் போட்டியில் நடப்பு நொக் அவுட் சம்பியன் இஸிபத்தன, நடப்பு லீக் சம்பியன் புனித பேதுருவானர், புனித சூசையப்பர், சென். தோமஸ், றோயல், வெஸ்லி, தேர்ஸ்டன், ஸாஹிரா, டி.எஸ். சேனாநாயக்க, கல்கிஸ்ஸை விஞ்ஞானம், திரித்துவம், புனித அந்தோனியார், கிங்ஸ்வூட், தர்மராஜா, வித்யார்த்த, ஸ்ரீசுமங்கல ஆகிய கல்லூரிகளும் பங்குபற்றுகின்றன.
போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானங்களில் நடைபெறவுள்ளன. எட்டு முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் இன்று, நாளை, நாளைமறுதினம் நடைபெறும்.
இன்றைய போட்டிகள்
தர்மராஜ எதிர் டி.எஸ். சேனாநாயக்க (சீ.ஆர். மைதானம்), வெஸ்லி எதிர் புனித சூசையப்பர் (றோயல் மைதானம்)
நாளைய போட்டிகள்
சென். தோமஸ் எதிர் விஞ்ஞானம் (சீ.ஆர். மைதானம் பி.ப.3.30 மணி), திரித்துவம் எதிர் புனித அந்தோனியார் (மின்னொளியில் சீ.ஆர். மைதானம் பி.ப.6.30 மணி), ஸாஹிரா எதிர் வித்யார்த்த (ஹெவ்லொக் பார்க் மைதானம்), இஸிபத்தன எதிர் ஸ்ரீசுமங்கல (றோயல் மைதானம்)
ஞாயிற்றுக்கிழமை
புனித பேதுருவானவர் எதிர் தேர்ஸ்டன் (றோயல் மைதானம்), றோயல் எதிர் கிங்ஸ்வூட் (சீ.ஆர். மைதானம்)
கால் இறுதிப் போட்டிகள் மே 3, 4ஆம் திகதிகளிலும் அரை இறுதிப் போட்டிகள் மே 10, 11ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி மே 17ஆம் திகதியும் நடைபெறும்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM