(இராஜதுரை ஹஷான்)
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான யோசனையின் உள்ளடக்கத்தை ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான சிறப்பு குழு நாளை வெள்ளிக்கிழமை (25) இரண்டாவது தடவையாக கூட உள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் புதன்கிழமை (23) சிறப்பு குழு நியமிக்கப்பட்டது.
இந்த சிறப்பு குழுவில் நீதியரசர் (ஓய்வுநிலை) எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்புக் குழு புதன்கிழமை (23) முதல் தடவையாக கூடி 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் பிரகாரம் தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பரிசீலனை செய்து கலந்துரையாடியுள்ளனர்.
நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான சிறப்பு குழு நாளை வெள்ளிக்கிழமை (25) இரண்டாவது தடவையாக கூட உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM