தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக் குழு மீண்டும் நாளையும் கூடும் !

Published By: Digital Desk 2

24 Apr, 2025 | 09:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான யோசனையின் உள்ளடக்கத்தை ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான சிறப்பு குழு நாளை வெள்ளிக்கிழமை (25) இரண்டாவது தடவையாக கூட உள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்  விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் புதன்கிழமை (23) சிறப்பு குழு நியமிக்கப்பட்டது.

இந்த சிறப்பு குழுவில் நீதியரசர் (ஓய்வுநிலை) எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்புக் குழு  புதன்கிழமை (23) முதல் தடவையாக கூடி  2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் பிரகாரம் தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பரிசீலனை செய்து கலந்துரையாடியுள்ளனர்.

நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான சிறப்பு குழு நாளை வெள்ளிக்கிழமை (25) இரண்டாவது தடவையாக கூட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42