ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : பிரதமர் மோடிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் கடிதம்

24 Apr, 2025 | 02:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பயங்ரவாத தாக்குதல் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்முறையாகக் கண்டிக்கும் அதேவேளை, இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின் போது நாம் எப்போதும் இந்தியாவுடன் நிற்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், அரசுக்கும், இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமது உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் மோதலை சகித்துக் கொண்ட நாம், மிக நீண்ட காலத்திற்கு முன்பு, வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஏனெனில் அது வலியையும் இழப்பையும் மட்டுமே நிலைநிறுத்துகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  உண்மையில், இந்தக் குற்றச் செயல், தீவிரவாதத்தின் தீங்கான தாக்கத்தை அப்பட்டமாக நினைவூட்டுவதாக உள்ளது.

 உங்கள் தலைமையின் கீழ் இந்தியா பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளாது என்று நம்புகின்றோம். சர்வதேச அரங்கில் உள்ள நாம் அனைவரும் சமாதான கலாச்சாரத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவதற்கு இது சரியான நேரம் ஆகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42
news-image

கெஹலியவின் மகன் கைது !

2025-05-21 15:16:07
news-image

சர்வதேச தேயிலை தினத்தில் நுவரெலியாவில் உரிமைகோரி...

2025-05-21 14:49:08
news-image

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்...

2025-05-21 14:10:24
news-image

கிழக்கு மாகாண வைத்தியதுறையின் வரலாற்று சாதனை...

2025-05-21 16:14:53