(எம்.மனோசித்ரா)
ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பயங்ரவாத தாக்குதல் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்முறையாகக் கண்டிக்கும் அதேவேளை, இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின் போது நாம் எப்போதும் இந்தியாவுடன் நிற்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது :
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், அரசுக்கும், இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமது உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் மோதலை சகித்துக் கொண்ட நாம், மிக நீண்ட காலத்திற்கு முன்பு, வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஏனெனில் அது வலியையும் இழப்பையும் மட்டுமே நிலைநிறுத்துகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில், இந்தக் குற்றச் செயல், தீவிரவாதத்தின் தீங்கான தாக்கத்தை அப்பட்டமாக நினைவூட்டுவதாக உள்ளது.
உங்கள் தலைமையின் கீழ் இந்தியா பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளாது என்று நம்புகின்றோம். சர்வதேச அரங்கில் உள்ள நாம் அனைவரும் சமாதான கலாச்சாரத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவதற்கு இது சரியான நேரம் ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM