உலகமே ஒருவனைக் கண்டு நடுங்கியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம்… அதுதான் உண்மை. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய ஒருவன், உலகத்தையே நடுங்கச் செய்தான். அவன் பெயர் Genghis Khan .
உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் Genghis Khan, படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தவன்.
பல நாடுகளில் இரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த அவன், நகரங்களை சூறையாடியபடியே, பீஜிங் முதல் மொஸ்கோ வரை பல நகரங்களையும், தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். உலக நாடுகள் அனைத்தும், இவனைக் கண்டு, பயந்து நடுங்கின.
யார் இந்த Genghis Khan?
1171இல் "டாட்டர்" என்ற இனத்தை சேர்ந்த சிலர் மற்றொரு இனத்தைச் சேர்ந்த தலைவரை விஷம் வைத்து கொன்றதையடுத்து, அவரது குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது.
இந்நிலையில், கொலை, கொள்ளை, கொரில்லா போர், பழிவாங்கும் எண்ணம் எல்லாம் சேர்ந்து ஒரு கொடூரமான மன்னனாக உருவெடுத்தான் அவரின் மகன். பெயர், "டெமுஜின்". சிதறிக்கிடந்த பல இனக்குழுக்களை வென்று, ஒரு மாபெரும் மங்கோலிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, Genghis Khan என்ற பட்டம் பெற்றான் அவன்.
உலகை ஆண்ட மிகப்பெரிய பேரரசரான இவன், 1206இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை கட்டமைத்தான். இவன் சிறப்பாக இராணுவத்தை அணிவகுக்கச் செய்வதில் உலகளவில் மிகையாக பாராட்டப்பட்டவன்.
உலகின் மாபெரும் சாம்ராஜ்யங்களில் Genghis Khan உடையதும் ஒன்றாகும். மங்கோலிய பேரரசு மத்திய ஆசிய இடமாக இருந்த சீன மற்றும் ரஷ்யாவிற்கு மத்தியில் இருந்த நிலப்பரப்பை அங்கிருந்த மலைவாழ் இனத்தினரின் உதவியோடு கைப்பற்றி, மங்கோலிய பேரரசை நிறுவினான்.
மங்கோலிய பேரரசு பசிபிக் கடலில் இருந்து கிழக்கு ஐரோப்பியா வரை கைப்பற்றி உலகின் மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. கைப்பற்றிய Genghis Khan இன் ஆட்சியில் சீனா, கொரியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஆர்மேனியா, குவைத், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளை ஆட்கொண்டிருந்தது.
மேலும், Genghis Khan இன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனைவிகள் மூலம், பலநூறு குழந்தைகள் அவனுக்கு இருந்தனர். அந்தவகையில், ஆசியாவில் இருக்கும் 8% ஆண்கள் Genghis Khan இன் வழிதோன்றல்கள் என ஓர் புள்ளிவிவரம் கூறுகிறது.
ஹிட்லரை விட பலமடங்கு மக்களை படுகொலை செய்திருக்கிறது Genghis Khan இன் இராணுவம். ஒரு சில நாடுகளை கைப்பற்றும் போது, ஒட்டுமொத்த மக்களையும் கூட, கொன்று குவித்துள்ளான். இவனது ஆட்சிக்கு கீழ் 40 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், Genghis Khan இடம் மத சகிப்புத்தன்மை இருந்தது எனவும், பல மதங்களின் மீது Genghis Khan மதிப்பு வைத்திருந்தான் எனவும் கூறப்படுகிறது. இஸ்லாம், புத்த மதக் கொள்கை, கிறிஸ்தவம் என பல மதங்கள் பற்றி கற்றறிந்திருந்தான்.
அத்துடன், இன வேறுபாடு கொள்கை கொண்டிருந்தான் Genghis Khan. தனது ஆட்சிக்கு கீழ்ப்பட்டு இருந்த நகரங்களையும், வேறு இன ஆட்களையும் ஆட்சி செய்ய அனுமதித்தான் என்றும், அவனின், மொங்கோலியா சாம்ராஜ்யத்தில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் என்றும் அறியப்படுகின்றது.
மேலும், தனது 16வது வயதில் Genghis Khan போர்டே (Borte) எனும் மொங்கோலிய மலைவாழ் இன பெண்ணை திருமணம் செய்துக் கொண்டான். இதற்கு பிறகு எண்ணற்ற பெண்களை இவன் திருமணம் செய்து கொண்டாலும், போர்டே தான் இவன் ஆட்சியில் பேரரசியாக இருந்தாள்.
Genghis Khan இன் இயற்பெயர் தெமுஜின் (Temujin). Genghis என்றால் சரி, உண்மை என்று பொருள், மேலும் இதற்கு கடல் என்ற பொருளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு பிறகு மிகப்பெரிய நிலப்பரப்பை கட்டி ஆண்டது மொங்கோலிய பேரரசு மட்டும் தான். அன்றைய உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தை விழுங்கியிருந்தது மொங்கோலிய படைகள். அவனின் போர்முறைகள் மிகவும் கொடூரமானதாகவும், தந்திரமாகவும் இருந்ததாக பல வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.
மேலும், பல போர்கள், வெற்றி என தொடர்ந்து சண்டையிட்டு வந்த Genghis Khan 1227ஆம் ஆண்டு மரணமடைந்தான். ஒருசில கூற்றுகள் இவன் குதிரையால் தூக்கியெறியப்பட்டு இறந்தான் என கூறினாலும், Genghis Khan இன் மரணத்தை பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.
இருப்பினும், இவனது மரணம் எப்படி நேர்ந்தது என்று இன்றளவும் தெளிவான கருத்துக்கள் ஏதும் இல்லை. மேலும், மொங்கோலியாவில் குறிக்கப்படாத இடத்தில், எங்கிருக்கிறது என தெரியாமலேயே இருக்கிறது Genghis Khan இன் கல்லறை.
அவனின் ஆசைக்கிணங்க, அவனது கல்லறை ஓர் நதியின் அடியில் இருக்கிறது என்றும், இதனால் யாரும் தொந்தரவு செய்யாத அளவு கல்லறை காக்கப்படும் எனவும் Genghis Khan கருதியதாகவும் ஒரு, வரலாற்று கூற்று நிலவி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM