கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வருகை தருவதை தவிர்க்கு தவிர்க்குமாாறு யாத்திரிகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கண்டி மாவட்ட செயலாளர் இந்திகா உடவத்த இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் தலதா மாளிகை புனித தந்ததாது வழிபட இன்றும் நாளையும் வருவதைத் தவிர்க்குமாறும், மாற்று திகதியைத் தேர்வுசெய்யுமாறும் நேற்று புதன்கிழமை இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியது.
ஏனெனில் தற்போது 300,000 க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் புனித தந்ததாது வழிபட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எனவே, இரண்டு நாட்களிலும் புனித பல் சின்னத்தை காட்சிப்படுத்துவதற்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் வந்துள்ளதால், அடுத்த இரண்டு நாட்களில் அதிகமான யாத்திரிகர்கள் வந்தால், அவர்கள் தங்கள் வழிபாட்டைச் செய்ய முடியாது என பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் 'ஸ்ரீ தலதா வழிபாடு'விற்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் யாத்திரிகர்களை கேட்டுக்கொண்டது.
கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமான புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் ஸ்ரீ தலதா வழிப்பாடு நிகழ்வு 7ஆவது நாள் இன்றாகும். 27 ஆம் திகதி அன்று நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM