‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு

Published By: Digital Desk 3

24 Apr, 2025 | 12:00 PM
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வுக்கு மறு அறிவித்தல் வரும் வரை  வருகை தருவதை தவிர்க்கு தவிர்க்குமாாறு யாத்திரிகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கண்டி மாவட்ட செயலாளர் இந்திகா உடவத்த இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்  பொதுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் தலதா மாளிகை புனித தந்ததாது வழிபட இன்றும் நாளையும் வருவதைத் தவிர்க்குமாறும், மாற்று திகதியைத் தேர்வுசெய்யுமாறும் நேற்று புதன்கிழமை இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியது.

ஏனெனில் தற்போது 300,000 க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் புனித தந்ததாது வழிபட வரிசையில் காத்திருக்கின்றனர்.

எனவே, இரண்டு நாட்களிலும் புனித பல் சின்னத்தை காட்சிப்படுத்துவதற்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் வந்துள்ளதால், அடுத்த இரண்டு நாட்களில் அதிகமான யாத்திரிகர்கள் வந்தால், அவர்கள் தங்கள் வழிபாட்டைச் செய்ய முடியாது என பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் 'ஸ்ரீ தலதா வழிபாடு'விற்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் யாத்திரிகர்களை கேட்டுக்கொண்டது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமான புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் ஸ்ரீ தலதா வழிப்பாடு நிகழ்வு 7ஆவது நாள் இன்றாகும். 27 ஆம் திகதி அன்று நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31
news-image

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம்...

2025-05-15 20:55:19
news-image

அமோனியா உர மூடைகள் மோசடி :...

2025-05-15 20:54:07