மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் ; மக்களை பாதிக்காமல், நன்மையளிக்கும் திட்டங்களுக்கு ஆதரவு - செல்வம் 

24 Apr, 2025 | 12:01 PM
image

இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் புதன்கிழமை (23) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றம் ஒரு சிறிய அரசாங்கம். அதன் பணி வீதி அமைப்பது, தெரு மின்விளக்கு பொருத்துவது மாத்திரமே என்று நினைக்க வேண்டாம். இந்த உள்ளூராட்சி சபைகள்   ஊடாகவே பல்வேறு சட்டங்களையும் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.

எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத மண் அகழ்வை நாங்கள் எமது சபைகள் ஊடாக தடை செய்ய முடியும். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு பகுதியில் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கான செயற்றிட்டங்களும் எமது பிரதேச சபை ஊடாக முன்னெடுக்க முடியும். எந்த அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும், அது பிரதேச சபைகள் ஊடாகவே செயற்படுத்தப்படும்.

மன்னார் மாவட்டத்துக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் எமது சபைகள் ஊடாக செயற்படுத்த முடியும்.

இந்தியாவுடன் அதிக நெருக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அவர்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தினாலும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், நன்மை தரக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ராமேஸ்வரம், தலைமன்னார் கப்பல் சேவை திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான நல்ல விடயங்களுக்கு நாங்கள் இந்தியாவுடன் இணைந்து திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஹரக் கட்டா'வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத...

2025-05-16 03:30:34
news-image

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி...

2025-05-16 03:20:36
news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14