இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் புதன்கிழமை (23) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றம் ஒரு சிறிய அரசாங்கம். அதன் பணி வீதி அமைப்பது, தெரு மின்விளக்கு பொருத்துவது மாத்திரமே என்று நினைக்க வேண்டாம். இந்த உள்ளூராட்சி சபைகள் ஊடாகவே பல்வேறு சட்டங்களையும் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.
எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத மண் அகழ்வை நாங்கள் எமது சபைகள் ஊடாக தடை செய்ய முடியும். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு பகுதியில் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கான செயற்றிட்டங்களும் எமது பிரதேச சபை ஊடாக முன்னெடுக்க முடியும். எந்த அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும், அது பிரதேச சபைகள் ஊடாகவே செயற்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்துக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் எமது சபைகள் ஊடாக செயற்படுத்த முடியும்.
இந்தியாவுடன் அதிக நெருக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அவர்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தினாலும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், நன்மை தரக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
உதாரணமாக ராமேஸ்வரம், தலைமன்னார் கப்பல் சேவை திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான நல்ல விடயங்களுக்கு நாங்கள் இந்தியாவுடன் இணைந்து திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM