மினுவங்கொட பொலிஸ் பிரிவின் ஜாபாலவத்த பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (23) மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாபாலவத்த பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை சுட்டுக் கொலைச் செய்தனர்.
அதன்படி, இந்தக் கொலைக்கு உதவியதற்காக மிரிஸ்வத்த பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டு,மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள் நேற்றையதினம் மிரிஸ்வத்த பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM