இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

Published By: Digital Desk 3

24 Apr, 2025 | 11:25 AM
image

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பினை தொடர விரும்பும் விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் சித்தி பெற்றிருக்கவேண்டியது அவசியமாகும். இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் 2025-26 கல்வி ஆண்டுக்கானது.

ஆயுர்வேதம் - பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கை நெறி வரை

யுனானி பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கை நெறி வரை

ஹோமியோபதி பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு

சித்த   பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பினபடிப்பு

அதேவேளை, யோகாவில் B.Sc மற்றும் B.A (யோக சாஸ்த்ர) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் முதுகலை படிப்புகளை நாடுபவர்கள், மத்திய இந்திய மருத்துவ கவுன்சிலால் (CCIM) அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆயுர்வேதம் மற்றும் யுனானியில் முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், CCIM ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய இளங்கலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc (யோகா) மற்றும் முனைவர் பட்ட (யோகா) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள், முறையே ஏதேனும் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in)  எதிர்வரும் ஜூன் மாதம்  08 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவேற்றம் செய்யவும். 

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவினை 0112421605, 0112422788, 0112422789 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், edu.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்புகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு, ஆர்வமுள்ள வேட்பாளர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை 011-2421605, 011-2422788, 011-2422789 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது eduwing.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணி உரித்தை நிரூபிப்பதற்கு இலவச சட்ட...

2025-05-21 17:38:31
news-image

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க...

2025-05-21 17:38:03
news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36