அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளருமான டொன் பிரியசாத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலன்னாவை மீதொட்டமுல்லயில் உள்ள 'லக்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டொன் பிரியசாத் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைதுசெய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
டொன் பிரியசாத் அவரின் குடியிருப்பு வளாகத்தில் நேற்றைய தினம் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM