ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் அதிநவீன நீச்சல் தடாகம் திறந்துவைக்கப்பட்டது

Published By: Vishnu

22 Apr, 2025 | 10:04 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய உயர் செயல்திறன்  நிலையத்தில் கிரிக்கெட் வீரர்கள் பெறும் நவீன பயிற்சிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அனுபவங்கள் வெகுவிரைவில் இரண்டாவது உலகக் கிண்ணத்தை இலங்கை சுவீகரிக்க வழிவகுக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் அமைந்துள்ள தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் அதிநவீன எட்டு தடங்களைக் கொண்ட நீச்சல் தடாகம் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் பிற விளையாட்டுக்களில் ஈடுபடும் தேசிய வீரர்களுக்கும் பயன்படுத்த வசதிகள் செய்துகொடுக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வாவை விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய கிரிக்கெட் முன்னேற்ற பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் தடாகம் 25 மீற்றர் நீளத்தையும் 21 மீற்றர் அகலத்தையும் கொண்டது. அதன் ஆழம் 1.2 முதல் 1.8 மீற்றர் வரையாக இருக்கிறது.

தேசிய அணிகள், ஏ அணி, தேசிய வெகப்பந்து மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள், வீரர்களின் உடற்தகுதிக்கு உதவுதல், போட்டிக்கு பிந்தைய மீட்சி, காயங்களிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் ஆகியன அங்கு வழங்கப்படும். அத்துடன் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் இந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்த முடியும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நவீன உடைமாற்று அறைகள், முதலுதவி வசதிகள், வீரர்களின் பராமரிப்பு மற்றும் மீட்சிக்குரிய தொழில்முறை சூழலை உறுதிசெய்யும் அத்தியாவசிய வசதிகள் என்பன நீச்சல் தடாக வளாகத்தில் செய்துகொடுக்கள்பட்டுள்ளது.

ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள உயர்  செயல்திறன்   நிலையத்தில் இப்போது சர்வதேச தரம்வாய்ந்த கிரிக்கெட் அரங்கு, நவீன உபகரணங்களுடன் கூடிய முழுமையான உடற்பயிற்சி நிலையம், மின்னொளியல் பயிற்சிபெறக்கூடிய மினி அரங்கு, பிரத்தியேக உடற்கூற்று மருத்துவ வசதிகள், ஆற்றல் வெளிப்பாடு பகுப்பாய்விற்கான மூளை நிலையம் என்பன இருக்கின்றன.

மிக விரைவில் இன்னும் பல நவீன வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளது.

இவை அனைத்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் சமகால தலைவர் ஷம்மி சில்வாவின் தொலைநோக்கு திட்டங்களாகும்.

நீச்சல் தடாகத்திற்கான பெயர்ப் பலகையை பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்பியன் சுகத் திலக்கரட்ன திரைநீக்கம் செய்துவைத்தார்.

அதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் வேண்டுகோளின்பேரில்  பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்பியன் சுகத் திலக்கரட்ன,  முன்னாள் இலங்கை அணித் தலைவரும் தற்போதைய தலைமைப் பயிற்றுநருமான சனத் ஜயசூரிய, இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து ஆகியோர்   இணைந்து நாடாவை வெட்டி நீச்சல் தடாகத்தை திறந்து வைத்தனர்.

இந்த நீச்சல் தடாகத்தில் பாடசாலை நீச்சல் வீரர்களின் கலவை நீச்சல் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா உட்பட நிருவாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49
news-image

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப்...

2025-05-15 16:14:14
news-image

ஆசிய 22இன் கீழ் மற்றும் இளையோர்...

2025-05-14 19:16:13
news-image

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12...

2025-05-14 14:49:52
news-image

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப்...

2025-05-14 13:40:17
news-image

இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி பழைய...

2025-05-14 12:21:00
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-14 11:40:36
news-image

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் மே 17 தொடரவுள்ளது

2025-05-13 02:00:13
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-12 23:05:11