யாழ் . மாநகர சபையில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்

22 Apr, 2025 | 05:17 PM
image

யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபையில் நாம் தமிழ் மக்கள் கூட்டணியாக மான் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதில் குறிப்பாக நல்லூர் மற்றும் காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஏனைய சபைகளும் கணிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். 

மாநகர சபையில் எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால், நாம் யாருக்கு ஆதரவு வழக்கின்றோம் என்பது தொடர்பில் மக்களுக்கு மிக விரைவில் அறிவிப்போம். 

சக தமிழ் தேசிய கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வரும் பட்சத்தில் அந்த கட்சிக்கு எமது ஆதரவை வழங்குவோம் அதற்காக அந்த கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம். 

தமிழ் மக்களுடன் அன்புரிமையுடன் நாம் கேட்டுக்கொள்வது, தமிழ் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். ஜனநாயத்தை பாதுகாக்க தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஹரக் கட்டா'வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத...

2025-05-16 03:30:34
news-image

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி...

2025-05-16 03:20:36
news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14