எம்முடைய உடலில் சில பகுதிகளில் தீங்கற்ற கட்டிகள் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் இன்ஃபிளமெட்ரி மயோஃபைப்ரோபிளாஸ்ரிக் கட்டி என குறிப்பிடுவார்கள். இத்தகைய கட்டிகளை தற்போது நவீன றொபாட்டிக் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிள்ளைகளிடத்திலும், இளைஞர்களிடத்திலும் இத்தகைய கட்டி பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக இத்தகைய கட்டிகள் பிரத்யேகமான திசுக்களில் உருவாகிறது. இவை கண்கள் ,மூக்கு ,வாய், செரிமான பாதை நுரையீரல், பிறப்புறுப்பு, சிறுநீர் பாதைகளில் அழற்சி பாதிப்பாக உருவாகி, பிறகு தீங்கற்ற கட்டியாக மாற்றம் பெறுகிறது. இத்தகைய கட்டிகள் பொதுவாக நுரையீரலில் ஏற்படக்கூடும். ஆனால் சிலருக்கு சிறுநீர்ப்பை, கருப்பை, குரல்வளை, வயிறு, கல்லீரல் போன்ற பகுதிகளில் பாதிப்பை உண்டாக்கும்.
இத்தகைய கட்டிகள் இரண்டு வகையினதாக வகைப்படுத்தப்படுகிறது. ஒருவகையினதான கட்டி எங்கு ஏற்படுகிறதோ.. அங்கிருந்து பாதிப்பை உண்டாக்குகிறது. ஆனால் மிக அரிதாக சில வகையான கட்டிகள் வேகமாக வளர்வதுடன் மற்றொரு உறுப்புக்கு பரவக்கூடும். இதனால் உடலில் எந்தப் பகுதியில் இந்த கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ.. அங்கு வீக்கம் உண்டாகிறது. அதே தருணத்தில் இவை புற்றுநோய் கட்டி அல்ல என்பதையும், இவை உடலின் பிற பகுதிகளுக்கு பயணிக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனாலும் இத்தகைய கட்டிகள் அருகில் இருக்கும் ஆரோக்கியமான திசுக்களை ஆக்கிரமித்து சேதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நுரையீரல் அல்லது வயிறு போன்ற பகுதிகளில் இவை வளரக்கூடும்.
இதற்கான காரணத்தை இதுவரை துல்லியமாக அவதானிக்க இயலவில்லை. இருப்பினும் பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாக ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் அவதானிக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அவர்களுக்கு சிடி ஸ்கேன் ,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். வெகு சிலருக்கு திசு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி நிவாரணம் வழங்குகிறார்கள். வீரியம் குறைவான கீமோதெரபி மற்றும் டார்கெட்டட் தெரபி ஆகியவற்றின் மூலமாகவும் இதற்கான ஒருங்கிணைந்த நிவாரணத்தை அளிக்கிறார்கள். தற்போது இத்தகைய கட்டிகளை அகற்றுவதற்கு நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட றொபாட்டிக் சத்திர சிகிச்சை மூலம் சீரமைக்கிறார்கள்.
வைத்தியர் அருண்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM