(நெவில் அன்தனி)
ஜெர்மனியில் நடைபெற்ற மகளிர் டென்னிஸ் சங்க (WTA) ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள அரினா சபலென்காவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்ட லெட்வியா வீராங்கனை ஜெலினா ஒஸ்டாபென்கோ சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டிகளில் சம்பியனான இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவை 6 - 4, 6 - 1 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் உலக தரவரிசையில் 24ஆம் இடத்தில் உள்ள ஜெலினா ஒஸ்டாபென்கோ வெற்றிகொண்டு சம்பியனானார்.
மகளிர் டென்னிஸ் சங்க டென்னிஸ் போட்டிகளில் 27 வயதான ஒஸ்டாபென்கோ வென்றெடுத்த 9ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இந்த வருடம் அவர் வென்றெடுத்த முதலாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற கத்தார் பகிரங்க டென்னிஸ் இறதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த ஒஸ்டாபென்கா அப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசின்மோவாவிடம் தோல்வி அடைந்திருந்தார்.
இந்தத் தோல்வியை நிவர்த்திசெய்யும் வகையில் ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றெடுத்த ஒஸ்டாபென்கோ, மகளிருக்கான உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM