ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 14வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு "ஆராதனா மகோற்சவம்" நிகழ்வானது கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை காலை பிரசாந்திக் கொடியேற்றப்பட்டு பாபாவின் புனித நீராடல் மற்றும் ஓங்கார சுப்பிரபாதத்துடன் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் சாயி பூஜை பஜனையும் நடைபெற்று, அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
இந்த புனிதமான அன்னதானம், சாயி நிலையத்தின் வழக்கப்படி, சாயி பாபாவின் விசேட தினங்களில், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், வத்தளையில் உள்ள பிரித்திபுர அனாதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதுடன் ஏனைய பக்தர்களுக்கும் விருந்தளிக்கப்படும்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புட்டபர்த்தி மகா சமாதியில் வைத்து பூஜித்து எடுத்துவரப்பட்ட, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஐம்பொன் திருவுருவச்சிலைக்கு நவபிஷேகம், சாயி பூஜை, பஜனை, மங்கள ஆராத்தி நடைபெறும்.
மகா சமாதி தினத்துக்கு முந்தைய தினமான ஏப்ரல் 23ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணியளவில், "ரூத்ரா யாகம்" ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM