உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலியின்போது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், பொதுச் சுடர், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஏனைய தேவாலய பங்குத் தந்தைகள், அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நினைவேந்தலின்போது தேவாலயத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM