(நெவில் அன்தனி)
தலா 5 தடவைகள் சம்பியனான இரண்டு அணிகளுக்கு இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு மின்னொளியில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 38ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை துவம்சம் செய்த மும்பை இண்டியன்ஸ் 9 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.
சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 7ஆம் இடத்திலிருந்த மும்பை இண்டியன்ஸ் 8 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது.
சென்னை சுப்பர் கிங்ஸ் தனது 6ஆவது தோல்வியுடன் தொடர்ந்தும் அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 114 ஒட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸின் வெற்றியை இலகுவாக்கினர்.
முன்னதாக ரெயான் ரிக்ல்டனுடன் 63 ஓட்டங்களை ரோஹித் ஷர்மா பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தார்.
ரிக்ல்டன் 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த பின்னர் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதிசெய்தனர்.
ரோஹித் ஷர்மா 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 68 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
ரவிந்த்ர ஜடேஜா 35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 32 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்களை விட 17 வயதான அறிமுக வீரர் அயூஸ் மஹாத்ரே 15 பந்துகளில் 4 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM