(நெவில் அன்தனி)
கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்ற ஆசிய றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப் தீர்மானம் மிக்க (ப்ளே ஓவ்) போட்டியில் மலேசியாவை 59 - 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெளுத்துக்குட்டிய இலங்கை, பிரதான அடுக்குக்கு தரமுயர்வு பெற்றது.
இந்தப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இலங்கை 9 ட்ரைகள், 7 கொன்வேர்ஷன்கள் மூலம் புள்ளிகளைக் குவித்தது. மலேசியாவின் புள்ளிகள் 3 ட்ரைகள், 2 கொன்வேர்ஷன்கள் மூலம் பெறப்பட்டது.
இடைவேளையின்போது இலங்கை 33 - 7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
போட்டி ஆரம்பி;த்தது முதலே மிகவும் வேகமாகவும் திறமையாகவும் எதிரணியை விஞ்சும் வகையில் விளையாடிய இலங்கை, ஐந்தாவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஜனிது டில்ஷான் மகத்தான ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிக புள்ளிகளை முர்ஷீத் தொரே தவறவிட்டார்.
ஆறு நிமிடங்கள் கழித்து இலங்கை பின்களத்தில் இடம்பெற்ற தவறைப் பயன்படுத்தி பிஜியை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய வீரர் எட்டோனியா வக்கா அற்புதமான ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிப் புள்ளிகளை அமருள் ஆக்கிக் பெற்றுக்கொடுக்க மலேசியா 7 - 5 என முன்னிலை அடைந்தது.
ஆனால், அதன் பின்னர் மலேசியாவை விஞ்சும் வகையில் விளைடியாக இலங்கை, புள்ளிகளைக் குவித்த வண்ணம் இருந்தது.
சிரேஷ்ட வீரர்களான அணித் தலைவர் நைஜல் ரத்வத்தே, உதவி அணித் தலைவர் தனுஷ்க ரஞ்சன், தரிந்து சத்துரங்க ஆகிய மூவரும் முன்மாதிரியாக விளையாடி இலங்கை அணிக்கு புள்ளிகள் குவிவதை உறுதி செய்தனர்.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் மலேசிய பின்கள வீரர்களை ஊடறுத்துச் சென்ற தனுஷ்க ரஞசன் ட்ரை வைத்து இலங்கை அணியை முன்னிலையில் இட்டார். அதற்கான மேலதிகப் புள்ளிகளை தொரே பெற்றுக்கொடுத்தார். (12 - 7)
மேலும் 10 நிமிடங்கள் கழித்து தனுஷ்கவைப் போன்றே ஆகாஷ் மதுஷன்கவும் ட்ரை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் தொரே பெற்றுக்கொடுத்தார். (19 - 7)
சற்று நேரத்தில் இலங்கைக்கான 4ஆவது ட்ரையை டினால் ஏக்கநாயக்க வைக்க, தொரே மேலதிகப் புள்ளிகளை இலகுவாக பெற்றுக்கொடுத்தார்.
இடைவேளைக்கான உபாதை ஈடு நேரத்தின்போது (40 10 2 நி.) இலங்கை அணியின் கூட்டுமுயற்சியன் மூலம் நவீன் மாரசிங்க ட்ரை வைத்தார். தொரே மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்க இடைவேளையின்போது இலங்கை 33 - 7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் ஆற்றல் அற்புதமாக இருந்தது. டினால் ஏக்கநாயக்க, 4 நிமிட இடைவெளியில் இரண்டு ட்ரைகளை வைத்து தனது ஹெட் - ட்ரிக்கை நிறைவு செய்தார்.
டினால் ஏக்கநாய்க 46ஆவது நிமிடத்திலும் 50ஆவது நிமிடத்திலும் ட்ரைகளை வைத்தார். 2 ட்கைளுக்குமான மேலதிகப் புள்ளிகளை தொரே பெற்றுக்கொடுக்க இலங்கை 47 - 7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
எவ்வாறாயினும் போட்டியின் 57ஆவது நிமிடத்தில் மலேசியாவின் இரண்டாவது ட்ரையையும் எட்டோனியா வக்கா வைத்தார். இந்த ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை மொஹமத் நஸ்ரின் பெற்றுக்கொடுத்தார்.
மூன்று நிமிடங்கள் கழித்து ஜனிது டில்ஷான் தனது 2ஆவது ட்ரையை வைத்ததுடன் அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் தோரே பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் 67ஆவது நிமிடத்தில் எட்டோனியா வக்கா தனது ஹெட் - ட்ரிக் ட்ரையைப் பூர்த்திசெய்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகள் பெறப்படவில்லை.
போட்டியின் 73ஆவது நிமிடத்தில் கிடைத்த லைன் அவுட் வாய்ப்பைப் பயப்படுத்தி முன்கள வீரர்களின் மோல் மூலம் தஹான் விக்ரமஆராச்சி ட்ரை வைத்தார். (59 - 19)
அதன் பின்னர் கடைசி 7 நிமிடங்களில் மேலதிகப் புள்ளிகள் பெறப்படவில்லை. போட்டி முடிவுக்கு வந்தபோது அரங்கில் குழுமியிருந்த இரசிகர்கள் பேரானந்தத்தில் துள்ளிக் குதித்து கரகோஷம் செய்து இலங்கை அணியிரை பாராட்டினர்.
இப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை, ஆசிய றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப் (Asia Rugby Emrirates Men's Championship Top Tier) பிரதான பிரிவுக்கு முன்னேறியதுடன் 2027 உலகக் கிண்ண றக்பி தகுதிகாண் சுற்றிலும் விளையாட தகுதி பெற்றது.
உலகக் கிண்ண றக்பி தகுதிகாண் சுற்றில் தென் கொரியா, ஹொங்கொங் சைனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளை இலங்கை எதிர்த்தாடும். இந்த சுற்றில் முதலிடம் பெறும் அணி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2027 உலகக் கிண்ண றக்பி போட்டியில் விளையாட தகுதிபெறும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணி, ஆபிரிக்க வலயத்தில் இரண்டாம் இடத்தைப் பெறும் அணியுடன் ப்ளே ஓவ் போட்டியில் விளையாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM