என்.பி.பி.யின் கனவு பலிக்­குமா?

20 Apr, 2025 | 03:53 PM
image

என்.கண்ணன்

தமது பக்கம் வந்­துள்ள தமிழ் மக்­களை மீண்டும் தங்­களின் பக்கம் தமிழ் கட்­சி­களால் இழுக்க முடி­யாது என, வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் கூறி­யி­ருக்­கிறார்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில், தேசிய மக்கள் சக்தி, வடக்கில் கிழக்கில் தமிழ்த் தேசிய கட்­சி­க­ளுடன் மல்லுக் கட்டிக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் தான் அவ­ரது இந்தக் கருத்து வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

தேசிய மக்கள் சக்­தியை பொறுத்­த­வ­ரையில், இப்­பொ­ழுது தனக்கு நிக­ரான ஒரு அர­சியல் கூட்­டணி இலங்­கையில் இல்லை எனக் கரு­து­கி­றது.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அந்தக் கட்­சிக்கு கிடைத்த ஆச­னங்­களும் வாக்­கு­களும் ஆளும்­கட்­சி­யி­னரை இவ்­வாறு பேச வைத்­தி­ருக்­கி­றது.

இதற்கு முன்னர் மூன்றில் இரண்டு அல்­லது அதற்கு அதி­க­மான ஆச­னங்­களை பெற்றுக் கொண்ட எந்­த­வொரு ஆட்­சி­யா­ளரும், தமிழ் மக்­களின் நம்­பிக்­கை­யையோ வாக்­கு­க­ளையோ பெற்­றி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் தான் அமைச்சர் விஜித்த ஹேரத் போன்­ற­வர்­களை, இப்­ப­டிப்­பட்ட ஒரு நினைப்பில் மூழ்கச் செய்­தி­ருக்­கி­றது. மூன்றில் இரண்டு பெரும்­பான்­மைக்கும் அதி­க­மான ஆச­னங்­க­ளுடன் ஆட்­சியை கைப்­பற்­றி­யி­ருக்கும் எந்த ஒரு தரப்­புக்கும் இது­போன்ற மமதை வரு­வது இயல்­புதான்.

ஜே.ஆர்.ஜய­வர்­தன ஆறில் ஐந்து பெரும்­பான்­மையை பெற்­றி­ருந்த போது எப்­படி எல்லாம் நடந்து கொண்டார் என்­பதும், மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை எப்­ப­டியோ பெற்­றுக்­கொண்ட மஹிந்த ராஜபக் ஷவும் கோட்­டா­பய ராஜபக் ஷவும் எவ்­வா­றெல்லாம் நடந்து கொண்­டனர் என்­ப­தையும் கண்முன் கண்­ட­வர்கள் என்­பதால், தேசிய மக்கள் சக்­தியின் இந்த நினைப்பை பற்றி யாரும் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை.

ஆனால், ஜே.ஆரும்,  மஹிந்த ராஜபக் ஷவும், கோட்­டா­பய ராஜபக் ஷவும் அடைய முடி­யாத ஒரு இலக்கை, தேசிய மக்கள் சக்தி அடைந்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

வடக்கு,  கிழக்கில் தமிழ் தேசிய கட்­சி­க­ளுக்கு சவா­லாக -தமிழ் மக்­களின் வாக்­கு­க­ளையும் ஆச­னங்­க­ளையும் அது கைப்­பற்றி இருக்­கி­றது என்­பதே அது.

முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு அல்­லது அதற்கும் அதி­க­மான ஆச­னங்­களை பெற்றுக் கொண்ட எந்­த­வொரு ஆட்­சி­யா­ளரும் தமிழ் மக்­களின் வாக்­கு­க­ளையோ ஆச­னங்­க­ளையோ பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை இருந்­தி­ருக்­க­வில்லை.

ஆனால், தமிழ் மக்­க­ளுக்கு நன்­மைகள் எதை­யுமே செய்­யாமல்- அவர்­களை அழி­வு­க­ளுக்­குள்ளே தள்ளி, இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து விட்டு, வெறும் வாக்­கு­று­தி­களை மட்டும் வழங்கிக் கொண்டு தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் அதிக ஆச­னங்­களை கைப்­பற்றிக் கொண்­டது ஆச்­ச­ரியம் தான்.

இதன் மூல­மாக தாங்­களும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் எனக் கூறிக் கொள்­கி­றது அந்தக் கட்சி.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தாங்­களே அவர்­க­ளுடன் நேர­டி­யாக தீர்த்துக் கொள்­கிறோம், தமிழ் கட்­சிகள் தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்டை கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ் தேசிய கட்­சி­களை ஓரங்­கட்டி ஒதுக்கித் தள்ளி, செல்­வாக்­கற்­ற­வர்­க­ளாக தூக்கி எறிந்து விட்டு, சிங்­கள தேசிய அர­சியல் நீரோட்­டத்­துக்குள் தமிழ் தேசிய அர­சி­யலை மூழ்­க­டித்து விட முயற்­சிக்­கி­றது.

காலப்­போக்கில் தமிழ்த் தேசிய அர­சியல் என ஒன்றே இல்­லாத வகையில், அதனை நீர்த்துப் போகச் செய்­வ­தற்கும், முற்­று­மு­ழு­தாக இல்­லாமல் செய்­வ­தற்கும், தேசிய மக்கள் சக்தி தனது அதி­க­பட்ச அதி­கா­ரத்­தையும் செல்­வாக்­கையும் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது.

2001 ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் விடு­தலைப் புலி­க­ளுடன் போர்­நி­றுத்தம் செய்து பேச்­சு­வார்த்தை நடத்­திய போது, எந்­த­வொரு இணக்­கப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்த விடாமல் குழப்பம் விளை­வித்து, போராட்­டங்­களை நடத்தி, தமி­ழர்­க­ளுக்கு என எது­வுமே கிடைக்­காமல் செய்­தது ஜே.வி.பி.

2005ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து சுனாமி நிவா­ரணக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களைத் தடுத்­தது.

2006 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு இணைப்பை உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் மூலம் இல்­லாமல் செய்து, தமி­ழர்­களின் தாயக கோட்­பாட்டை சிதைப்­ப­திலும் அது வெற்றி கண்­டது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை போருக்குள் தள்­ளி­விட்டு விடு­தலைப் புலி­களை அழிக்கச் செய்­த­திலும், தமி­ழரின் அர­சியல் போராட்­டத்தை இன்­றைய வெறுமை நிலைக்குள் தள்­ளி­ய­திலும், ஜே.வி.பியின் பங்கு கணி­ச­மா­னது.

ஆக, தமிழ் மக்கள் தமது ஆயுத பலத்தை கொண்டு, அர­சியல் ரீதி­யான பலத்தை பெற்று விட முடி­யா­த­படி தடுத்து, அவர்­களின் அர­சியல் போராட்­டத்தை அழிப்­பதில் முனைப்­புடன் செயல்­பட்ட ஜே.வி.பி, இப்­பொ­ழுது அவர்­களின் ஜன­நா­யக அர­சியல் போராட்­டத்­தையும் இல்­லாமல் செய்யும் நோக்கில் செயற்­ப­டு­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் அபி­லா­ஷை­க­ளையும், தேசிய இனப்­பி­ரச்­சி­னை­யையும், பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­யாக மாற்றி, தமிழ் மக்­க­ளுக்கு எல்லா உரி­மை­களும் பெற்றுக் கொடுக்­கப்­பட்டு விட்­டன என்று நியா­யப்­ப­டுத்­து­வது தான் அதன் இலக்கு .

இதன் ஊடாக தமி­ழர்கள் வர­லாற்றில் ஒரு­போதும் தமது உரி­மைக்­காக மீண்டும் குரல் எழுப்ப முடி­யா­த­படி- வெகுண்­டெழ முடி­யா­த­படி தடுத்து, அவர்­களை மடை­மாற்றம் செய்யும் வேலையை, மிகத் துல்­லி­ய­மாக முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றது தேசிய மக்கள் சக்தி .

தமிழ் தேசிய அர­சி­யலை முன்­னெ­டுத்த தரப்­பு­களின் தவ­றுகள், தேசிய மக்கள் சக்­தியின் இந்த திட்­டத்­துக்கு துணை போய்­விட்­டதை மறுக்க முடி­யாது.

இத்­த­கைய  கட்­டத்தில் தான், தமது பக்கம் வந்­து­விட்ட தமிழ் மக்­களை தமிழ் தேசிய கட்­சி­களால் மீண்டும் பழை­ய­படி தங்­களின் பக்கம் கொண்டு செல்ல முடி­யாது என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார் விஜித்த ஹேரத்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தமிழ் மக்கள் தமது கட்­சிக்கு பெரு­வா­ரி­யாக ஆத­ரவை வழங்­கு­வார்கள், தம்மால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற நினைப்பில், அந்த கட்சி இவ்­வா­றான கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கட்­சி­களை முற்று முழு­தாக ஓரங்­கட்டி ஒதுக்கி தள்­ளி­விட்டு தங்­களால் வடக்கு, கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று அந்த கட்சி நம்­பு­கி­றது.

இந்த நம்­பிக்கை எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மாகும் என்­பதை தேர்தல் தான் தீர்­மா­னிக்கப் போகி­றது.

ஆனால், தமிழ் மக்கள் கடந்த காலங்­களில் இது­போன்ற பல சிங்­கள தலை­வர்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்று விட முயற்­சித்தார். விடு­தலைப் புலி­களை தோற்­க­டித்து விட்டு, ஈ.பி.டி.பி. மற்றும் சில தமிழ் அமைப்­புக்­க­ளுடன் சேர்ந்து தமி­ழர்­களின் மனதை வென்று விடலாம் என நினைத்தார். மஹிந்த ராஜபக் ஷவும் அவ்­வாறே முயற்­சித்தார்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தல் நடந்­த­போது, மஹிந்த ராஜபக் ஷ  தரப்பு, வெற்றி குறித்த மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்பை கொண்­டி­ருந்­தது.

ஆனால், அந்த தேர்­தலில் தமிழ் மக்கள் வர­லாற்று ரீதி­யான பாடத்தைக் கற்பித்திருந்தார்கள். தமிழ் மக்களின் தலைவர்கள் சிலர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். தவறான முடிவுகளை எடுக்க எடுத்திருக்கலாம்.

ஆனால், தமிழ் மக்களை, சிங்கள தலைமைகள் வழிநடத்துகின்ற அளவுக்கு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை, தமது தலைவிதியை தீர்மானிக்கும் உரித்துடையவர்கள்.

தமிழ் மக்கள், சிங்கள தலைவர்களிடம் தமது இறைமையையோ சுயநிர்ணய உரிமையையோ அடமானம் வைக்க துணியமாட்டார்கள் என்று எதிர்பார்ப்பு தமிழ் தலைவர்களிடம் இருக்கிறது.

இவ்வாறான நிலையில், விஜித்த ஹேரத்தின் நம்பிக்கை எந்தளவுக்கு சரியானது என்பதை, தமிழ் மக்களின் வாக்குகள் தான் தீர்மானிக்கப் போகின்றன.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோர்தானில் இதய சத்திரசிசிச்சைக்கு பின்னர் காசாவின்...

2025-05-21 16:00:09
news-image

ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம்...

2025-05-21 12:31:03
news-image

சுற்றுலா மூலம் கிழக்கை மாற்றியமைக்க முடியும்...

2025-05-21 10:39:12
news-image

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு...

2025-05-20 12:46:23
news-image

"இலங்கையில் நடந்த போரை நான் ஒரு...

2025-05-19 11:26:39
news-image

பாகிஸ்தானின் பயங்கரவாத தந்திரோபாயம், அணுவாயுத மிரட்டலுக்கு...

2025-05-19 05:57:24
news-image

பச்சை மலைகளில் சிவப்புக் கொடிகள் பறப்பதை ...

2025-05-18 22:35:25
news-image

உட்பூசல்களை  தவிர்த்து  அதிகாரத்தை கைப்பற்றுவார்களா? 

2025-05-18 22:31:16
news-image

முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி

2025-05-18 15:32:08
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்திற்கான புதிய வரி...

2025-05-18 14:29:16
news-image

சுய வர்த்தக பேரம் தேடி..

2025-05-18 16:51:01
news-image

பலஸ்தீனர்களை பட்டினியால் வாட வைத்துள்ள இஸ்ரேல்

2025-05-18 14:18:52