ரஸ்யாவிற்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீன அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான்,சீனா யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர் மாநாட்டில் சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றது,சீன அரசாங்க பிரதிநிதிகள் ரஸ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டியிருந்தார்.
உக்ரைனிடம்இது குறித்த தகவல்கள் உள்ளது எதிர்வரும் நாட்களில் அதனை வெளியிடவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்துசீனாவின் மூன்று நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ள உக்ரைன் இந்த நிறுவனங்கள் அதிநவீன ஐஎஸ்காண்டர் ஏவுகணைகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM