எம்மில் சிலருக்கு ரத்த அழுத்தம் தாங்க இயலாமல் உயர்ந்து விடுவதால் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும். இத்தகைய பாதிப்பிற்கு மண்ணீரலில் ஏற்படும் அடைப்பும் ஒரு காரணம் என கருதப்படுகிறது.
இதற்காக தற்போது Splenic Vein Recanalization எனும் நவீன சிகிச்சை அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்த சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணமும் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மில் சிலர் திடீரென்று ரத்த வாந்தி எடுப்பர். சிலருக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டிருக்க கூடும் அல்லது மண்ணீரலில் நாட்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
இதன் காரணமாக மண்ணீரல் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் அதிகரித்து, அங்கு வீக்கமோ அல்லது சேதமோ ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது .
இதனால் மண்ணீரலில் இருந்து கல்லீரலுக்கு நடைபெற வேண்டிய ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைபடுகிறது. இந்நிலையில் மண்ணீரலில் வீக்கம் அடைந்திருக்கும் நரம்புகளை சீரமைக்க தற்போது Splenic Vein Recanalization எனும் நவீன நுண் துளை சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.
இத்தகைய சிகிச்சை மூலம் மண்ணீரலில் உள்ள நரம்புகள் சீரமைக்கப்படுகின்றன. அத்துடன் மண்ணீரலுக்கும் , கல்லீரலுக்கும் இடையேயான ரத்த ஓட்டமும் சீரமைக்கப்படுகிறது.
இதனால் கல்லீரல் ஏற்படும் ரத்தக் கசிவு தடுக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயலும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட வெகு சிலருக்கு மட்டுமே மண்ணீரல் நீக்கம் எனும் பிரத்யேக சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
வைத்தியர் அபிஷேக் தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM